tamilnadu

img

சாலையில் கிடந்த ரூ. 4லட்சம் உரியவரிடம் ஒப்படைத்த  காவல் துணை கண்காணிப்பாளர்

சாலையில் கிடந்த ரூ. 4லட்சம் உரியவரிடம் ஒப்படைத்த  காவல் துணை கண்காணிப்பாளர்  பணத்தை ஒப்படைத்த ஓட்டுநருக்கு பாராட்டு

மதுரை மாவட்டம் வடகாடுபட்டியைச் சேர்ந்தவர் பாண்டி. ஓட்டுநரான இவர் தற்போது உசிலம்பட்டியில் வசித்து வருகிறார். செவ்வாயன்று சந்தையில் காய்கறி வாங்குவதற்காகச் சென்றுள்ளார். அப்போது பஜார் சாலையில் ஒரு பை கிடந்துள்ளது. அந்தப் பையில் லட்சக்கணக்கான ரூபாய்கள் கட்டுக்கட்டாக இருந்துள்ளது. மனிதநேயம் மிக்க பாண்டி அந்தப் பையை உசிலம்பட்டியில் போக்குவரத்து காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வரும் ஆறுமுகத்திடம் ஒப்படைத்துள்ளார். அவர் உடனடியாக உசிலம்பட்டி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராஜாவிற்கு தகவல் தெரிவித்து பணத்தை அவரிடம் ஒப்படைத்துள்ளார். உடனடியாக விசாரணையில் இறங்கிய காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பணக்கட்டுகளில் இருந்த வங்கி முத்திரையைப் பார்த்து சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று வங்கி ஊழியர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது பணத்தை வங்கியிலருந்து எடுத்தது ராகேஷ்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை அழைத்து சக காவல் துறையினர் முன்னிலையில் பணத்தை ஒப்படைத்த காவல்துணைக் கண்காணிப்பாளர் ராஜா, பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த பாண்டிக்கு ரூ.500 வெகுமதியளித்து பாராட்டினார்.
ராகேஷ்குமார் வங்கியிலிருந்து பணத்தை எடுத்து பையில் வைத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது பை வண்டியிலிருந்து தவறி சாலையில் விழுந்துள்ளது. பையில் ரூ.4 லட்சம் இருந்துள்ளது.
படம் mdu-usilai-police