கடலூர், ஜூலை 14- கடலூர் மாவட்டத்தில் சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப் பதற்கு தடை உள்ள நிலையிலும் அதனை சில மீனவர் கிராமத்தினர் கடைபிடிப்பதில்லை. இதனால் மீனவர் கிராமத்தினரி டையே அடிக்கடி மோதல் நடைபெறு கிறது. கடந்த ஜூலை 1ஆம் தேதி சுருக்கு மடி வலையை பயன்படுத்திய 22 படகு களுக்கு சீல் வைக் கப்பட்டன. அதைத் தொடர்ந்து பலகட்ட பேச்சுவார்த்தை, போராட்டங்கள் நடைபெற்று வரு கின்றன. இந்நிலையில், தேவனாம் பட்டினம் மீனவர்கள் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி பிடித்த மீன்களை அருகிலுள்ள தைக்கால் தோணித்துறை பகுதியில் ஏலம் விடு வதாகக் கூறப்படுகிறது. அதற்கு அந்த கிராமத்தினர் எதிர்ப்புத் தெரி வித்து வருகின்றனர். இதுகுறித்து மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் பா.செல்வகணபதி கூறுகையில், தைக்கால் தோணித் துறை பகுதியில் 70 மீன்பிடி படகு களில் மீன் பிடிக்கப்படுகிறது. ஆனால், யாரும் சுருக்குமடி வலை யைப் பயன்படுத்துவதில்லை. சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களை எங்களது பகுதியில் வைத்து ஏலம் விட்டு சுமார் 50 வண்டிகளில் ஏற்றி வரு கின்றனர். இதற்கு எதிர்ப்புத் தெரி வித்தால் மிரட்டுகிறார்கள். இது குறித்து மீன்வளத்துறையினர் மற்றும் காவல்துறைக்கும் தகவல் தெரி வித்துள்ளோம். எனவே இந்த பிரச்ச னையில் மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.