தமிழக முதலமைச்சர் கைவிரிப்பு
சென்னை,மே 13- கொரோனா மேலும் பரவாமல் தடுப்பது மக்களின் கையில்தான் உள்ளது என்று முதலமைச்சர் எடப் பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா நோய் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங் கால் மக்கள் வேலையின்றி வருமான மின்றி அவதிப்படுகின்றனர். அரசு அளித்த நிவாரணம் சில நாட்களுக்கு மட்டுமே உதவியது. அது போதுமான தாக இல்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர், கொரோனா மேலும் பரவா மல் தடுப்பது மக்களின் கையில் தான் உள்ளது என்று கூறியுள்ளது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது.
சென்னை தலைமைச்செய லகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சி யாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதனன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கூட்டத்தில் முதலமைச்சர் பேசியதாவது: தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் சிறப்பாக செய்துள்ளனர். கொரோனா பாதிப்பு முதலில் உயர்ந்து பின்னர் குறையும் என கண்டறியப்பட்டுள்ளது. தமிழகம், இந்தியாவிலும் தற்போது உயர்ந்துள்ள கொரோனா பாதிப்பு பின்னர் குறைய வாய்ப்புள்ளது.
கொரோனா மேலும் பரவாமல் தடுப்பது மக்களின் கையில்தான் உள் ளது. தனிமனித இடைவெளி, மாஸ்க் போன்றவற்றை பின்பற்றினால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். அரசின் அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்ற வேண்டும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இறப்பு விகிதம் 0.67 சதவீதம் என குறைந்து காணப்படுகிறது. தமிழ கத்தில் ரேசன் பொருட்கள் தடையின்றி தருவதால் உணவுப்பொருள் பற்றாக் குறை இல்லை. மக்களுக்கு உதவ அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டுள்ளன. மே மாதத்தை போல ஜூன் மாதத்திலும் ரேசன் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் துணை முதலமை ச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.