நாகர்கோவில்,அக்.24- சென்னையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் வைத்த பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற பெண் பலியானார். இதனைத் தொடர்ந்து பேனர் வைக்க உயர்நீதிமன்றம் தடை விதித்தது. திமுகவும் அதிமுகவும் பேனர் வைக்கமாட்டோம் என்று உறுதியளித்தன. இந்நிலையில் ஆளும்கட்சி அமைச்சர் பங்கேற்ற விழாவில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் தாலிக்குத் தங்கம், திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம் அமைச்சர் வி.சரோஜா தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சரை வரவேற்று பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன. பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இந்த பேனரை பார்த்த போலீசாரும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.