tamilnadu

img

புலையர் குடியிருப்புப் பாதை ஆக்கிரமிப்பு

திண்டுக்கல், ஜூலை 17- கொடைக்கானல் கே.சி.பட்டி அருகே புலையர் சமூக குடியிருப்பு மற்றும் சுடுகாட்டு க்குச் செல்லும் பாதையை ஆக்கிரமித்த திண்டுக்கல் மருத்துவர் மீது மாவட்ட ஆட்சி யர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.  இது தொடர்பாக சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.செல்லையா விடுத்துள்ள அறிக்கை:-  கொடைக்கானல் கே.சி.பட்டி அருகே யுள்ளது கூட்டப்பாறை. இங்கு புலையர் சமூ கத்தைச் சேர்ந்த ஆதிவாசி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த கிராமத்திற்குச் செல்லும் வண்டிப்பாதையை திண்டுக்கல்லில் குடல் மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர் கண்ணன் ஆக்கிரமித்துள்ளார். இந்த ஊரிலி ருந்து நல்லூர்காட்டில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கு செல்வதற்கும் அங்கு உள்ள கடைகளில் பொருட்களை வாங்குவதற்கும், மயானத்திற்கு செல்வதற்கும் இந்த பாதை யைத் தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. கரும்பாறியல் உள்ள எங்கள் மூதாதையர் காலம் முதல் சுமார் 200 ஆண்டு காலமாக இங்கு வசித்து வருகிறோம்.  கடந்த ஜனவரி மாதம் இங்கு வந்த வட்டாட்சியர், டாக்டர் கண்ணனின் ஆக்கிர மிப்பை அகற்றிச் சென்றனர். ஆதிவாசி மக்கள்; காலம்காலமாக பயன்படுத்தி வந்த வண்டிப்பாதையை கொடுக்க முடியாது என்று கூறி இரும்பு கம்பிகள் கொண்ட வேலியை மருத்துவர் அமைத்துள்ளார். மாவட்ட ஆட்சியர் மருத்துவர் கண்ணன் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள வண்டிப் பாதையை மீட்டுத் தர வேண்டும். பழங்குடி மக்களின் குடியிருப்பு மற்றும் சுடுகாட்டுப் பாதையை ஆக்கிரமித்த மருத்துவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இது தொடர்பாக மனு ஒன்றை கே.சி.பட்டி கிராம நிர்வாக அலுவலரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வத்தலகுண்டு ஒன்றியச் செயலாளர் கே.டி.கலைச்செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் வழங்கினர்.