கொரோனா பேரிடர் காரணமாக 3-வது கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. ஊரடங்கு காரணமாக மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்கள் விவரிக்க முடியாத துயரங்களுக்கு ஆளாகி யுள்ளனர். பசி, பட்டினியாலும், மருந்து மாத்திரைகள் வாங்க முடியாமலும், பிரத்யேக அவசர செலவுகளுக்கு காசு இல்லா மலும் பல லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் அல்லல் படுகின்றனர்.
இதுகுறித்து முதலமைச்சருக்கும், உயர் அதிகாரி களுக்கும் பல முறை சங்கத்தின் சார்பிலும், மாற்றுத்திறனு டையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பிலும் மனுக்கள் அனுப்பியும், உயர் அதிகாரிகளுடன் பேசியும் எந்தப் பலனும் இல்லை. மாறாக, மாற்றுத்திறனாளிகள் படும் துயரங்களை மறைக்கும் விதத்தில், அரசு துவக்கியுள்ள சிறப்பு ஹெல்ப் லைன் மூலம் லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்துள்ளதாக சமூகநலத்துறை அமைச்சரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும் பொய்ப்பிரச்சாரம் செய்வது கண்டிக்கத்தக்கது. எனவே, மாற்றுத்திறனாளி களை பாதுகாக்க வேண்டிய அரசின் கடமையை செய்ய வலி யுறுத்தி, மே-7 வியாழன் அன்று, கிராம ஊராட்சி, ஒன்றிய, தாலுகா, மாவட்ட அளவில் அரசு அலுவலகங்களில் குடி யேறும் போராட்டங்களை நடத்துவது என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கம் அழைப்பு விடுக்கிறது என மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி, பொதுச் செய லாளர் எஸ்.நம்புராஜன் ஆகியோர் கூறியுள்ளனர்.