tamilnadu

img

மதுரையில் எல்ஐசி ஊழியர்கள் ஆவேச போராட்டம்

பட்ஜெட்டில் எல்ஐசியை தனியார்மயமாக்கும் அறிவிப்புக்கு கண்டனம்

மதுரை, பிப்.1-   எல்.ஐ.சி. பங்குகளை விற்பது என்று பட்ஜெட்டில்  மத்திய பாஜக அரசின் முன்மொழிவைக் கண்டித்து அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் மதுரைக் கோட்ட அலுவல கத்தில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டச் சங்கத் தலைவர் ஜி.மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். என்.பி.ரமேஷ்கண்ணன்,  ஊழியர் சங்கப் பொதுச்செயலாளர், டி. பாண்டியன், முதல்நிலை அதிகாரிகள் சங்கப் பொதுச்செயலாளர், ஜோசப் சுரேஷ் ராஜ்குமார், வளர்ச்சி அதிகாரி கள் சங்கப் பொதுச்செயலாளர், சி.சந்திர சேகரன் பென்சனர் சங்கப் பொதுச்செய லாளர், லியாபி மற்றும் லிகாய் முக வர்கள் சங்கத் தலைவர்கள் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மத்திய அரசின் இந்த முன்மொழி வைக் கண்டித்தும், எல்.ஐ.சி யின் பங்கு களை விற்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தியும் முழக் கங்கள் எழுப்பினர்.
 

;