இன்று தில்லி சட்டமன்றத்தின் இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லி கலவரத்தில் பேஸ்புக்கிற்கு ஒரு பங்கு இருப்பதாகத் தெரிகிறது, மேலும் குழுவின் அடுத்த கூட்டத்தில் ஆஜராகுமாறு பேஸ்புக் இந்தியா அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
குறிப்பு :
டெல்லியில் கலவரத்தில் சிக்கி இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து நிலையில், இந்த கலவரத்திற்கு முக்கியக் காரணமாக கபில் மிஸ்ரா ட்வீட் குறிப்பிடப்பட்டு உளவுத்துறை எச்சரித்தும் டெல்லி போலீஸ் எதற்காக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமலிருந்தது என்ற பல்வேறு கேள்வி எழுந்தது.
இந்த கலவரத்தில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் உள்பட 48பேர் மீது இப்போதுவரை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 516 பேர் கைது செய்யப்பட்டு கலவரம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லி போலீஸ் மேற்கொள்ளும் பணிகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். மத வன்முறையைத் தூண்டி விடுபவர்கள் அதற்கான தண்டனையைப் பெறுவார்கள்” எனக் குறிப்பிட்டிருந்தது. இதற்கிடையே கலவரம் குறித்து தகவல் அறிய டெல்லி போலீஸ் ஊடகங்கள் உள்பட அனைத்து தரப்பினரிடமும் உதவி கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி கலவரத்தில் பேஸ்புக்கிற்க்கு பங்கு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.பேஸ்புக்கிற்கு எதிரான குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பதாக விசாரணை நிறுவனம் கண்டறிந்தால், பேஸ்புக்கிற்கு எதிரான துணை குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும், ”என்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ மற்றும் கமிட்டியின் தலைவர் ராகவ் சாதா கூறினார்.
டெல்லி கலவரத்தில் பேஸ்புக்கின் பங்கு இருந்தால் ,பேஸ்புக் இந்தியா அதிகாரிகளை வரவழைக்கும் அடுத்த கூட்டத்தில் ஒரு முடிவை எடுக்க வேண்டும் . உயர் அதிகாரிகள் குழு முன் ஆஜராக நோட்டீஸ் வழங்கப்படும், ”என்று அவர் மேலும் கூறினார்.
பிப்ரவரி மாதம் வடகிழக்கு டெல்லியின் மோசமன கலவரமானது பேஸ்புக்கின் "முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி" இருக்கிறது என்பதே திரு சதா கூறினார்.
பேஸ்புக் செயலியை மக்கள் பரவலாக பயன்படுத்தி வரும் நிலையில் ,அத்தகைய பேஸ்புக் பாஜகாவுக்கு உதவியாக பல்வேறு செய்திகளை மக்களிடையே பரப்பியதற்கான ஆதாரங்கள் தற்போது வெளிவந்து கொண்டே இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.