tamilnadu

img

‘அத்தா’ மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

கம்பம்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் ஏ.அப்துல் வஹாப் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், ஏ.கே.பத்மநாபன், டி.கே.ரங்கராஜன் எம்.பி., உ.வாசுகி, அ.சவுந்தரராசன், பி.சம்பத், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் உரமாக திகழ்ந்த மகத்தான தலைவர்களில் ஒருவரான, அத்தா என்று அழைக்கப்பட்ட தோழர் அப்துல் வஹாப் அவர்களின் மறைவுச் செய்தி வேதனை அளிப்பதாகவும் என்றென்றும் அவரது வழியில் மார்க்சிஸ்ட் கட்சியையும் மார்க்சிய சித்தாந்தத்தையும் முன்னெடுத்துச் செல்வோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

மாநில செயற்குழு அஞ்சலி
கம்பம் நகரில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தோழர் அப்துல் வஹாப் உடலுக்கு கட்சியின் மாநில செயற்குழு சார்பில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.தங்கவேல், எம்.என்.எஸ். வெங்கட்டராமன், ஏ.லாசர், க.கனகராஜ், மதுக்கூர் இராமலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.கட்சியின் தேனி, திண்டுக்கல், மதுரை மாநகர், மதுரை புறநகர்,விருதுநகர், திருப்பூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டக் குழுக்களின் தலைவர்கள், தங்களது அன்புத் தலைவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். கட்சியின் இடுக்கி மாவட்டக்குழு சார்பில் செயலாளர் கே.கே. ஜெயச்சந்திரன், தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன், சிஐடியு இடுக்கி மாவட்டச் செயலாளர் கே.எஸ். மோகனன் உள்ளிட்டோரும்; கட்சியின் கோயம்புத்தூர் மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகிய தலைவர்களும்; தீக்கதிர் கோவை பதிப்பு பொது மேலாளர் எஸ்.ஏ. மாணிக்கம், பொறுப்பாசிரியர் அ.ராஜா உள்ளிட்டோரும்; சிபிஐ சார்பில் தேனி மாவட்டச் செயலாளர் பெத்தாட்சி ஆசாத், ஏஐடியுசி மாநிலத் துணைத்தலைவர் சுந்தரராஜன், எஸ்யுசிஐ சார்பில் சத்தியமூர்த்தி, பார்வர்டு பிளாக் சார்பில் அறிவழகன், மதிமுக சார்பில் வி.எஸ்.கே. ராமகிருஷ்ணன், ஐயுஎம்எல் சார்பில் சாகுல் ஹமீது, கம்பம் ஜமாத்  தலைவர் பக்ருதீன், மக்கள் அதிகாரம் இயக்கத்தின் சார்பில் மோகன் உள்ளிட்டோரும் அப்துல் வஹாப் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, இரங்கல் கூட்டத்திலும் தங்களது செய்திகளை தெரிவித்தனர்.கட்சியின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் உட்பட கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் தங்களது இதயப்பூர்வமான இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

;