tamilnadu

img

சிஐடியு தலைவராக கே.ஹேமலதா; பொதுச்செயலாளராக தபன்சென் மீண்டும் தேர்வு

சென்னை, ஜன. 27 -  சிஐடியு 16வது அகில இந்திய மாநாட்டில் தலைவராக கே.ஹேமலதா, பொதுச் செயலாளராக தபன்சென், பொருளாளராக எம்.எல்.மல்கோட்யா ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  இந்த மாநாட்டின் நிறைவுநாளில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். துணைத் தலைவர்களாக ஏ.கே.பத்மநாபன், ஜே.எஸ்.மஜூம்தார், அ.சவுந்தரராசன், கே.ஓ.ஹபீப், கே.கே.திவாகரன், ஆனத்தலவட்டம் ஆனந்தன், மெர்சிகுட்டியம்மா, மாணிக்தேவ், மாலதிசிட்டிபாபு, ரகுநாத்சிங், விஷ்ணுமஹாந்தி,  எஸ்.வரலட்சுமி, டி.எல்.கராத், பேபிராணி, எம்.சாய்பாபு, சுபாஷ்முகர்ஜி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

செயலாளர்களாக ஸ்வதேஷ் தேவ்ராய், இளமரம் கரீம், காஷ்மீர்சிங் தாகூர், பிரசாந்த் நந்தி சௌத்ரி, ஜி.சுகுமாறன், பி.நந்தகுமார், எம்.ஏ.கபூர், டி.டி.ராமானந்தன், ஏ.ஆர்.சிந்து, கே.சந்திரன்பிள்ளை, மீனாட்சிசுந்தரம், உஷாராணி, அனாதிசாஜூ, சுக்காராமுலு, மதுமிதா பந்தோபாத்யாயா, அமிதவா குஹா, ஆர்.கருமலையான், தபன்சர்மா, பிரமோத் பிரதான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். (ஒரு இடம் பின்னர் நிரப்பப்படும்). மொத்தம் உள்ள 39 நிர்வாகிகளில் 8 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதுபெரும் தொழிற்சங்கத் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாசுதேவ் ஆச்சாரியா நிரந்தர அழைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேற்கண்ட நிர்வாகிகள் தவிர 425 பேர் கொண்ட பொதுக்குழு தேர்வு செய்யப்பட்டது.

தமிழகத்திலிருந்து...

தமிழகத்தை சேர்ந்த ஏ.கே.பத்மநாபன், அ.சவுந்தரராசன், மாலதி சிட்டிபாபு ஆகியோர் துணைத்தலைவர்களாகவு ம், ஜி.சுகுமாறன், ஆர்.கருமலையான் செயலாளர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.  தமிழகத்திலிருந்து 35 பேர் பொதுக்குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் செயற்குழு உறுப்பினர்களாக ஆர்.சிங்காரவேலு, வி.குமார், கே.திருச்செல்வன், கே.ஆறுமுகநயினார், ஏ.ஜானகிராமன், கே.தங்கமோகன் இ.முத்துக்குமார், கே.சி.கோபிகுமார், டி.டெய்சி, எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேற்கண்ட 10 பேருடன் பொதுக்குழு உறுப்பினர்களாக எம்.மகாலட்சுமி, ஆர்.சிங்காரன், என்.ஐடா ஹெலன், சி.திருவேட்டை, எஸ்.கே.மகேந்திரன், ஆர்.மோகன், வி.கருப்பையன், எம்.சந்திரன், ஆர்.தெய்வராஜ், சி.ஜெயபால், கே.ஆர்.கணேசன், ஆர்.ரசல், ஆர்.எஸ்.செண்பகம், பி.என்.தேவா, எஸ்.கண்ணன், தி.ஜெய்சங்கர், இ.பொன்முடி, எம்.தனலட்சுமி, எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.ரெங்கராஜ், டி.கோவிந்தன், பிரபாகர் தேவராஸ், ஏ.கிருஷ்ணமூர்த்தி, எம்.பி.ராமச்சந்திரன், சி.நாகராஜ் ஆகியோர் பொதுக்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 

;