tamilnadu

img

தமிழகத்தில் எண்ணிக்கை 18 பேராக உயர்ந்தது

மதுரை, மார்ச் 23-  தமிழகத்தில் கொரோனோ பாதித்தவர்களின் எண்ணிக்கை 12இல் இருந்து 18 பேராக அதிகரித்துள்ளது. மார்ச் 24 செவ்வாயன்று அமெரிக்காவில் இருந்து சென்னை  வந்த இருவருக்கும், சுவிட்சர்லாந்தில்  இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து திரும்பிய 74 வயதான ஆண் மற்றும், 52 வயதான பெண் இருவருக்குமே கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம், சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த 25 வயது பெண் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். புதிதாக பாதிக்கப்பட்ட மூன்று பேரும், புரசை வாக்கம், போரூர், கீழ்க்கட்டளை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.