tamilnadu

img

மருத்துவ படிப்புகளில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் சேர்ந்துள்ளனர்? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

மருத்துவ படிப்புகளில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் சேர்ந்துள்ளனர்? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ சேர்க்கையில் உள் ஒதுக்கீடு வழங்கக் கோரி நெல்லையை சேர்ந்த ப்ரீத்தி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். 
இந்த மனு விசாரணை செய்த நீதிபதிகள், கடந்த 3 ஆண்டுகளில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற எத்தனை மாணவர்கள் மருத்துவ இடங்களில் சேர்ந்துள்ளனர் என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் தாக்கல் செய்ய மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையேற்று விசாரணையை 20ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மேலும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ சேர்க்கையில் உள் ஒதுக்கீடு வழங்கக் கோரி வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.