கரூர், செப். 3- கரூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை யில் அதிகம் விபத்து நடக்கும் 8 இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைகின்றன. முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டம் கரூரை அடுத்த மண்மங்களத்தில் நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார். அப்போது பேசிய அவர், கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரி வித்தார். மேலும் தேசிய நெடுஞ்சாலையில், தவுட்டுப்பாளையம், மண்மங்களம், ஆண்டான் கோவில் பிரிவு, அரவக்குறிச்சி பிரிவு, கோடாங்கிபட்டி உள்ளிட்ட 8 இடங்களில் சாலையைக் கடக்கும் போது நடக்கும் விபத்துகளை தவிர்க்க உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.