tamilnadu

img

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 சென்னை, ஆக.18- தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பிருப்ப தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பெரும்பாலான மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என்றார். சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்றும் தெரிவித்த புவியரசன், தென்மேற்கு பருவமழைக் காலத்தில் தமிழகத்திற்கு தற்போது வரை 8 விழுக்காடு குறைவாகவும், சென்னைக்கு 19 விழுக்காடு அதிகமாகவும் மழை பெய்துள்ள தாகவும் குறிப்பிட்டார்.

;