பள்ளிக் கல்வி, உயர் கல்வி துறை மானியக் கோரிக்கைகள் விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக உறுப்பினர் ஈஸ்வரப்பன், “நீட் தேர்வால் அரசுப் பள்ளியில் படித்த ஒரு மாணவர் கூட மருத்துவக் கல்லூ ரிக்கு செல்ல முடியவில்லை. 12 ஆம் வகுப்பு மாண வர்களுக்கு கணித புத்தகம் 2 தொகுப்பாக கொடுக்கப் பட்டுள்ளது. முதல் தொகுப்பை நடத்தி முடிக்க 147 வகுப்புகளும், இரண்டாம் தொகுப்பை முடிக்க 158 வகுப்புகளும் தேவை. இதன்படி 31+36 என 67 வகுப்பு கள் நடத்தாமலேயே மாணவர்களை தேர்வுவெழுதச் சொன்னால் எப்படி தரம் உயரும்? என்றார். அதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “மத்திய அரசு எந்த தேர்வு கொண்டு வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் வகுக்கப்பட் டுள்ளது. பொதுத்தேர்வுக்கு பிறகு மாணவர்களை தேர்வு செய்து 35 நாட்கள்பயிற்சி அளிக்கப்படும். குறைந்தது 100 பேராவது இந்தாண்டு மருத்துவக் கல்விக்கு செல்வார்கள். கணித பாடத்தை ஆய்வு செய்து குறைக்க ஒரு குழு அமைக் கப்பட்டுள்ளது”என்றார்.