குரூப்-2 தேர்வு
சென்னை, செப்.29- சென்னையில் ஞாயிறன்று டி.என்.பி.எஸ்.சி. செயலா ளர் நந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம் இதுவரை நடந்தது இல்லை. இனி வரும் நாட்களிலும் நடக்க வாய்ப் பில்லை.முதன்மைத்தேர்வில் மொழிப்பாடம் எழுத்துத் தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. இதனால்தான் முதல் நிலைத்தேர்வில் மொழிப்பாடம் நீக்கப்பட்டுள்ளது.குரூப்-2 முதன்மை பாடம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் குரூப்-2 தேர்வில் இனி கிராமப்புற மற்றும் தமிழ் வழியில் படித்த மாணவர்களும் தேர்ச்சி பெறுவார்கள். குரூப்-2 பழைய பாடத்திட்டத்தின்படி தமிழே தெரி யாத ஒருவர் தேர்வில் வெற்றி பெற்று அரசு பணிக்குச் செல்ல முடியும். ஆனால் புதிய பாடத்திட்டத்தின் மூலம் தமிழ் தெரியாதவர்கள் தேர்ச்சி பெறுவது முற்றிலும் தடுக்கப்பட் டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.