சென்னை, பிப். 5- குரூப்-4 தேர்வு முறைகேடு விவகாரத் தில் அமைச்சர் ஜெயக்குமார் மீது சமூக வலை தளங்களில் குற்றச்சாட்டுகள் கூறப்படு கிறது. இதனால் அலறிப்போன அவர், தம் மீது அவதூறு பரப்பினால் விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டி யுள்ளார். ராயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் ஒரு சில மையங்களில் நடந்த முறை கேட்டை வைத்து ஒட்டு மொத்த தேர்வு முறையை குறைசொல்ல முடியாது. தமிழ்நாட்டில் 6500 மையங்களில் 16 லட்சம் பேர் தேர்வு எழுதி உள்ளனர். ஒரு சில மையங் களில் ஏற்பட்ட முறைகேடுகளில் யார் ஈடு பட்டு இருந்தாலும் உயர் பதவி, சிறு பதவி என எந்த பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். டி.என்.பி.எஸ்.சி. விவகாரத்தை எதிர்க் கட்சிகள் பூதாகரமாக ஆக்க நினைக்கி றார்கள். டி.என்.பி.எஸ்.சி. தேர்வு விவகாரத் தில் என் மீது தயாநிதிமாறன் உள்ளிட் டோர் அவதூறு பரப்பி வருவதாகவும் அவர்கள் மீது விரைவில் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை வரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.