tamilnadu

img

முன்னாள் சபாநாயகர் பி.ஹெச். பாண்டியன் காலமானார்

 சென்னை,ஜன.4- தமிழக சட்டப்பேரவை முன்  னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டி யன் உடல்நலக் குறைவால் கால மானார். அவருக்கு வயது 75. நெல்லை மாவட்டம்  சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரி என்ற  ஊரை சேர்ந்தவர் பி. எச். பாண்டி யன் . எம்.ஜி.ஆர். ஆட்சியின் போது அதிமுகவில் இருந்தவர். சேரன்மகாதேவியில் இருந்து  1977, 1980, 1984 ஆண்டுகளில் அதிமுக  சார்பில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெ டுக்கப்பட்டவர். 1980ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டு வரை சட்டமன்ற துணை சபாநாயகராகவும், பிப்ரவரி 27, 1985 முதல் பிப்ரவரி 5, 1989 வரை சபாநாயகராகவும் பதவி  வகித்தார். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு, 1989ஆம் ஆண்டில் அதிமுகவின் ஜானகி அணி சார்பில் வெற்றி பெற்ற ஒரே உறுப்பினர் பி.எச். பாண்டியனாகும். 1999ஆம் ஆண்டில் திரு நெல்வேலி தொகுதியிலிருந்து மக்கள வைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக அமைப்புச் செயலாளராகவும் இருந்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓ.பி எஸ் அணிக்கு ஆதரவாளராக மாறி சசிகலா தரப்புக்கு எதிராக இருந்தார். ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி, சிகிச்சை தொடர்பாக சிசிடிவி காட்சி களை வெளியிட வேண்டும் என முதன் முத லில் வலியுறுத்தியதும் பி.எச்.பாண்டி யன்தான். அதிமுகவின் மூத்த முன்னோடியான அவர், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் போரூர் ராமச்சந்திரா  மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட நிலையில், சனிக்கிழமை யன்று(ஜன.4) காலை 8 மணிக்கு உயிரிழந்தா. சென்னை அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டி ருந்த பி.எச்.பாண்டியன் உட லுக்கு, முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி அஞ்சலி செலுத்தி னார். அமைச்சர்கள் உள்ளிட்ட  பலரும் அஞ்சலி செலுத்தினர்.

மு.க.ஸ்டாலின்

பி.எச்.பாண்டியன் மறைவுக்கு திமுக சார்பில் இரங்கல் தெரிவித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,“ சட்டப்பேரவைத் தலைவருக்கு ‘வானளா விய அதிகாரம்’இருக்கிறது என்பதைத் தனது  செயல்பாடுகள் மூலம் வெளிப்படுத்தியவர் பி.எச்.பாண்டியன் என அவர் குறிப் பிட்டுள்ளார். அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்  பாற்பட்டு பி.எச்.பாண்டியன் மீது கலைஞர்  அளவு கடந்த அன்பு வைத்திருந்ததாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பி.எச் பாண்டி யன் மறைவு அரசியல் தலைவர்களுக்கு மட்டு மின்றி, வழக்கறிஞர் சமுதாயத்திற்கும் பேரி ழப்பு என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன்  உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்திருக்கி றார்கள். பி.எச்.பாண்டியன் உடல் ஞாயிறன்று (ஜன.5) சென்னையில் நடைபெறுகிறது.
 

;