tamilnadu

img

ராஜேந்திர பாலாஜியை நீக்குக: கே.எஸ்.அழகிரி

சென்னை,பிப்.4- பாஜகவின் ஊதுகுழலாக  மாறிய கே.டி.ராஜேந்திர பாலா ஜியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று காங்கி ரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர்  கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி யிருக்கிறார்.  இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:- தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைகிற வரை வாய்மூடி மவுனிகளாகவும், கொத்தடிமைகளாகவும் இருந்த அமைச்சர்கள் இன்றைக்கு வரம்பு  மீறி அநாகரீகமாக பலகுரல்க ளில் பேசுகிறார்கள்.  முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி இவர்களை கட்டுப்படுத்து கிற அதிகாரம் இல்லாதவராக இருக்கிறாரா? இத்தகைய அநாக ரீகப் பேச்சுகள் நடைபெறுவதற்கு மறைமுகமாக ஊக்கம் தருகி றாரா? பால்வளத்துறை அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி பத்திரிகை யாளர்களிடம் வாய்க்கு வந்தபடி கீழ்த்தரமான அநாகரீகமான வார்த்தைகளை சமீபத்தில் அள்ளி வீசியிருக்கிறார்.

தமிழக அரசு கேட்பதை யெல்லாம் நரேந்திர மோடி அரசு  வாரி வழங்குவதாக கூறிய ராஜேந்திர பாலாஜி, தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய நீட்  விலக்கு மசோதாவிற்கு மோடி அர சிடமிருந்து இதுவரை ஒப்புதல் பெற முடியாதது தெரியாதா? அதிமுக ஆட்சியாளர்கள் பாஜகவிற்கு பல்லக்கு தூக்கு வது ஏன்? தமிழக மாணவர்க ளின் எதிர் காலத்தைப் பாழடித்து  வருகிற நீட் தேர்வு திணிக்கப்படு வதை தடுக்கமுடியாத நிலையில்  இருக்கிற அதிமுக அமைச்சர்கள் இப்படி பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது? திருச்சியில் பாஜக நிர்வாகி  கொல்லப்பட்டதற்கு தனிப்பட்ட  பகைதான் காரணமே தவிர  மதமோ, அரசியலோ காரண மல்ல என்பதை காவல்துறையி னர் தெளிவுப்படுத்தியிருக்கிறார் கள். கொலையாளிகளை காவல்  துறையினர் கைது செய்திருக்கி றார்கள். ஆனால், அமைச்சர் ராஜேந்  திர பாலாஜியோ இந்த கொலைக் குக் காரணம் இஸ்லாமியப் பயங்கரவாதம் என்று பேசி யிருப்பது அப்பட்டமான சட்ட விரோதமாகும். அவரது பேச் சுக்கு என்ன ஆதாரம்? ஒரு அமைச்  சரே, ஆதாரமற்ற கருத்துக்களை பொறுப்பற்ற முறையில் கூறி னால் காவல்துறையினரின் விசார ணையை பாதிக்காதா? 

சமீபகாலமாக பாஜகவின் ஊதுகுழலாக ராஜேந்திர பாலாஜி  மாறியது ஏன்? எதைப் பேசுவது, எதைப் பேசக் கூடாது என்கிற அடிப்படை நாகரீகம் கூட அறி யாத வகையில் அனைத்துக் கட்சி களின் மீதும் சேற்றை வாரி இறைத்திருக்கிறார். ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கள் தொடர்ந்து சர்ச்சைக் குரிய வகையில் இருக்கிறது. ஒரு மனநோயாளியின் உளற லாகவே இருந்து வருகிறது. எனவே,  அவரை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து முதலமைச்சர் நீக்கவேண்டும். இல்லையென்றால் ஆளுநர் தலையிட வேண்டும். இவர் தொடர்ந்து நீடிப்பாரேயானால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மதக்கலவரங்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் உரு வாகிவிடுமென எச்சரிக்க விரும்பு கிறேன். தமிழகத்தில் ரத்தக் களறியை உருவாக்குவதுதான் ராஜேந்திர பாலாஜியின் நோக்கம் என்றால் அதை முறியடிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ஜனநா யக மதச்சார்பற்ற சக்திகளுக்கு இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.