மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களுக்கு,தேசத்தின் கோடானு கோடி உழைக்கும் மக்கள் மற்றும் இந் திய பொருளாதாரத்தின் அரணா கத் திகழ்கிற நடுத்தர சிறு குறு தொழில்கள் தொடர்பான ஓர் பிரச் சனை மீது உங்களின் உடனடி கவ னத்தை ஈர்க்க விழைகிறேன்.
இந்தியப் பொருளாதாரத் தின் பல அளவுகோல்களில் நடுத் தர சிறு குறு தொழில்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுபவை ஆகும். இத்தொழில்கள் 12 கோடிக் கும் மேற்பட்டவர்க்கு வேலை வாய்ப்புகளைத் தந்து வருகின் றன. வேறு சில மதிப்பீடுகள் இந்த எண்ணிக்கையை அதிக மாக காண்பிக்கின்றன. இந்திய மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 30ம், இந்திய ஏற்றுமதிகளில் அநேகமாக 50 % பங்களிப்பும் இத் தொழில்களால் வழங்கப் பட்டு வருகின்றன. 28 மாநிலங்க ளில் உள்ள 350 தொழில் நகரங்க ளில் உள்ள 1.05 லட்சம் நடுத்தர சிறு குறு தொழில் நிறுவனங்க ளில் 2019 ல் நடத்தப்பட்ட ஆய் வில் அதற்கு முந்தைய 4 ஆண்டு களில் 1.35 கோடியில் இருந்து 1.49 கோடி வரை புதிய வேலை கள் இத் தொழில்களில் உருவாகி யுள்ளன என கூறப்பட்டுள்ளது. ஆகவே நடுத்தர சிறு குறு தொழில்களின் நலமும் வளர்ச்சி யும் மொத்த இந்திய பொருளா தாரத்தின் நலத்திற்கும், வளர்ச் சிக்கும் மிக முக்கியமான தேவை ஆகும். சமூகத்தின் எல்லா பகுதி யினரின் “உள்ளடக்கிய வளர்ச் சிக்கும்” (InclusiveGrowth) அதன் பங்கு முக்கியமானது.
கோவிட் 19 நெருக்கடிக்கு முன்பே இத் தொழில்கள் நெருக் கடியில் இருந்தவையே. அரசின் ஆதரவை நாடி மன்றாடிக் கொண்டிருந்தவையே. நிதி, சந்தை, ஆதார வளம் போன் றவை குறித்த பல கோரிக்கை களை அவை முன் வைத்து வந் தன. கோவிட் 19 இப் பிரச்சனை களை எல்லாம் பன்மடங்காக மாற்றியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இத் தொழில்களின் முன்னணி பிரமுகர்களிடம் இருந்து பல ஆலோசனைகளை கிடைக்கப் பெறுகிறேன்.
கீழ்க்காணும் பிரச்சனைகள் மீது உங்களின் கவனத்தை ஈர்ப்ப தோடு பெரும் வேலையின்மை நெருக்கடி ஏற்படாமல் தவிர்ப்ப தற்கான உடனடி நடவடிக்கை களை மேற்கொள்ளுமாறும் வேண்டுகிறேன்.
- கடன் சேவை உள்ளடங்கிய விகிதத்தில் (Debt Service Coverage Ratio) உரிய மாற்றங்களை கொண்டு வந்து அதனை நெகிழ்வாக மாற்றி நிதி வளம் எளிதில் கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்கான விரிவான மேலும் நெகிழ்வான கொள்கையை, கள நிலைமைகளை கணக்கிற் கொண்டு, இந்திய அரசு ஓராண்டிற்காவது வகுக்க வேண்டும்.
- செயல் மூலதனத்திற்கான (Working Capital) வரையறைகளை உரிய முறையில் மாற்றி அமைக்க வேண்டும்.
- ADHOC கடன் ஏற்கனவே உள்ள செயல் மூலதன வரம்புகளுக்கு உரியதைக் காட்டிலும் கூடுதலாக 25 % வழங்கப்பட வேண்டும். இது குறித்த ரிசர்வ் வங்கியின் முந்தைய அறிவிக்கைகள், ADHOC கடன்கள் உரிய நேரத்தில் அதுவும் நெருக்கடி மிக்க காலங்களில் வழங்கப்படா விட்டால் அந்த நிறுவனங்கள் நலிவடைந்து மீட்சிக்கும் வழி இல்லாதவையாக மாறிவிடும் என்று அழுத்தமாக சுட்டிக் காட்டியுள்ளன. இந்த அவசரத்தை மனதிற் கொண்டு உடனடி நடவடிக்கைகள் கால விரயம் இன்றி எடுக்கப்பட வேண்டும். இந்த கடன் 2018-19 ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்டு வழங்கப்பட வேண்டும்.
- கடனுக்கான இ.எம்.ஐ செலுத்துவதற்கு தரப்பட்டுள்ள மூன்று மாத கால நீட்டிப்பு நிவாரணத்தை தரவில்லை. வலியை குறுகிய இடைவெளிக்கு சற்று தள்ளிப் போட்டுள்ளது என்பதே. இந்த 3 மாத கால நீட்டிப்பு காலத்திற்கும் வட்டி ரத்து செய்யப்படாததால் கூடுதல் சுமையை அது நடுத்தர சிறு குறு தொழில்கள் மீது ஏற்றியுள்ளது. எனவே இத் தொழில்களின் அனைத்து வங்கி கடன்களை செலுத்துவதற்கு ஓராண்டு கால நீட்டிப்பு (Moratorium) வழங்கப்பட வேண்டும்.’
- எல்லா கால முறை கடன்களுக்கும் (Term Loans) கடன் செலுத்தும் காலத்தை குறைந்த பட்சம் 5 ஆண்டுகளாக நீட்டிக்க வேண்டும்.
- நடுத்தர சிறு குறு தொழில்களுக்கு 6 சதவீத வட்டி மானியத்தை (Interest Subsidy) 31.03.2021 வரையிலான ஓராண்டிற்கு வழங்க வேண்டும். குறு தொழில்களின் ரூ 3 லட்சம் வரையிலான கடன்களுக்கு கூடுதல் விகித வட்டி மானியத்தை உறுதி செய்ய வேண்டும். 31.12.2020 வரை எந்தவொரு கடன் தவணை கட்டத் தவறுவதும் செயல்படா சொத்தாக (NPA- Non Performing Asset) கருதப்படாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அவர்களின் கடந்த கால கடன் செலுத்துகிற அனுபவத்தை கணக்கிற் கொண்டு இதை மேலும் ஓராண்டிற்கு விரிவாக்க வேண்டும்.
- அமைச்சர் நிதின் கட்கரி “நிதியின் நிதி” (Fund of Funds) என்ற ரூ 10000 கோடி திட்டத்தை அறிவித்துள்ளார். அதிக கடன் நம்பக விகிதம் (High Credit Rating) கொண்ட நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதை நாடினால் அவற்றின் 15% பங்குகளை அரசு வாங்கி மூலதன தேவைகளுக்கு உதவும் என்பதே. இதன் இடர்கள் ஆய்வுக்குரியவை. பங்கு சந்தையின் நிலையற்ற தன்மையும் மனதிற் கொள்ளப்பட வேண்டும்.
- ஜி.எஸ்.டி அறிக்கை சமர்ப்பிப்பதற்கான வழிகாட்டல் நெறிகள், கெடு தேதிகள் நெகிழ்வானதாக மாற்றப்பட வேண்டும். இந்த நிதியாண்டின் இறுதி வரை தாமத சமர்ப்பித்தலுக்கான தண்டத் தொகை ரத்து செய்யப்பட வேண்டும். நிலுவை பாக்கி, நடப்பு வரிகள் செலுத்தப்படுவதற்கு 6 மாத கால “வரி விடுமுறை” (Tax holiday) அறிவிக்கப்பட வேண்டும். இதனால் ஜி.எஸ்.டி பதிவு ரத்தாகாமல் இருப்பதும் உறுதி செய்யப்பட வேண்டும்.
- ஐ.ஜி.எஸ்.டி செலுத்தும் போது Bill of entry ல் “Duty Credit Scrips” ஐ அதிலேயே கழித்து கொள்கிற நடைமுறையை கொண்டு வர வேண்டும். (தற்போது இது அடிப்படை வரி செலுத்தும் போது மட்டுமே வழங்கப்படுகிறது). இது இந்த நிறுவனங்கள் நிதிக்காக வங்கிகள்/ நிதி நிறுவனங்களை சார்ந்து இருப்பதை குறைக்கும்.
- வங்கிகள்/ நிதி நிறுவனங்கள் இந்த நிவாரணத்திற்கான நிதிச் சுமையை தாங்க இயலாவிடில் அரசாங்கம் அதை ஏற்று ஈடு கட்ட வேண்டும்.
- அரசு கொள்முதல் கொள்கை (Government Procurement Policy) மேலும் நடுத்தர சிறு குறு தொழில்களுக்கு சாதகமானதாக மாற்றப்பட வேண்டும். அதன் அமலாக்கம் இதய சுத்தியோடு அமைய வேண்டும்.