tamilnadu

img

எட்டு வழிச்சாலை, உயர் மின்கோபுரம், பெட்ரோலியக் குழாய் பதிப்புத் திட்டங்களைக் கைவிடுக

மார்க்சிஸ்ட் கட்சி பிரச்சார இயக்கம்

தருமபுரி, ஆக. 22- எட்டு வழிச்சாலை, உயர்மின்கோபுரம், பெட்ரோலியக் குழாய் பதிப்புத் திட்டங்களை கைவிடக்கோரி தருமபுரியில் சனியன்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரச்சார இயக் கத்தில் ஈடுபட்டனர். கொரோனா நிவாரணமாக 6 மாத காலத் திற்கு ஒரு குடும்பத்திற்கு  ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். நூறுநாள் வேலைத்திட் டத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலை மற்றும் நாள் ஒன்றுக்கு கூலியாக ரூ.600ம் வழங்குவ தோடு இத்திட்டத்தை நகர்ப்புறத்திற்கும் விரிவுபடுத்த வேண்டும். விவசாயத்தை சீர ழிக்கும் சுற்றுச்சூழல் மதிப்பீடு வரைவு அறிக்கையைத் திரும்பப்பெற வேண்டும்.  எட்டு வழிச்சாலை, ஐடிபிஎல், உயர் மின்கோபு ரம், பாரத் பெட்ரோலியம் எண்ணெய்க்  குழாய்ப் பதிப்பு, சிவாடி கிராமத்தில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய திட்டங்களைக்  கைவிட வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தருமபுரி செங்கொடிபுரத்தில் நடை பெற்ற இந்த பிரச்சாரத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் நகரக்குழு உறுப்பினர் எஸ்.மணிகண்டன் தலைமை வகித்தார். இதில், மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கிரைஸாமேரி, நகரச் செயலாளர் ஆர்.ஜோதிபாசு ஆகி யோர் கலந்து கொண்டனர்.