tamilnadu

img

பண பலம், அதிகார பலத்தை மீறி திமுக வேட்பாளர் வெற்றி!

சிபிஎம் வாழ்த்து

சென்னை, ஆக. 9- வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பணபலம், அதிகார பலத்தை மீறி வெற்றி பெற்றுள்ள திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு: நடைபெற்ற வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றிபெற்றுள்ளார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தலோடு வேலூர் தொகு திக்கும் சேர்ந்தே தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால் அதிமுக - பாஜக சதி செய்து இத்தொகுதியில் தேர்தலை ரத்து செய்து விட்டன. தனியாக தேர்தல் நடைபெற்றால் பண பலம், அதிகார பலத்தை பயன்படுத்தி தாங்கள் வெற்றி பெற்றுவிடலாம் என பகல் கனவு கண்டனர். ஆனால்  வேலூர் தொகுதி வாக்காளர்கள் அதிமுக - பாஜக கூட்டணியின் சதியை முறிடியத்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்துள்ளனர். பண பலம், அதிகார பலம், தேர்தல் துஷ்பிரயோகங்கள் இவற்றையெல்லாம் முறியடித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த வேலூர் நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் பாராட்டுதல்களையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.   திமுக வேட்பாளர் வெற்றிக்காக உழைத்த அனைத்துக் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.   மதவெறி பாஜக - மக்கள் விரோத அதிமுக கூட்டணியை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என்பதற்கு இந்தத் தேர்தலும் மேலும் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 

;