tamilnadu

img

நுண் நிதி நிறுவன கடன்களை தள்ளுபடி செய்திடுக

சிபிஎம், விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சத்தியமங்கலம், ஜூலை 31- நுண் நிதி நிறுவன கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்திடக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி, விவசாயத் தொழிலாளர் சங்த்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். கொரோனா பாதிப்பால் வேலை வாய்ப்பின்றி தவிப்போரிடம் கடன் மற்றும் தவணையை திருப்பித் தரக் கேட்டு மிரட்டும் நுண் நிதி கடன் நிறுவனங்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். அக்கடன் களை தமிழக அரசு தள்ளுபடி செய்திட வேண்டும். கொரோனா பொதுமுடக்க காலம் முழுமைக் கும் விவசாயத் தொழிலாளர் குடும் பத்திற்கு மாதம் ரூ.7 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்க வேண்டும். ஊரக வேலை உறுதி திட்டத்தில் 200 நாட்கள் வேலையும், தினக்கூலியாக ரூ.600 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி முழக்கங் கள் எழுப்பப்பட்டன. சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையம் ஊராட்சி அலு வலகம் முன்பு அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் சார் பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய உதவி செயலாளர் பி.நாக ராஜ் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் கே.எம்.விஜயகுமார், தாலுகா உதவி தலைவர் ஜெ.மைக் கேல்ராஜ், தாலுகா செயலாளர் பி.வாசுதேவன், ஒன்றியச் செயலா ளர் ஆர்.சத்தியமூர்த்தி, சிபிஎம் ஈரோடு மாவட்டக்குழு உறுப்பினர் கள் கே.ஆர்.திருத்தணிகாசலம், ஆ.சகாதேவன், குளத்துப் பிரிவு செய லாளர் பொன்னுச்சாமி உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

நாமக்கல்

இதேபேல் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் நுண் நிதி நிறுவ னங்களை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத் திற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.ரவி தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோ கன்,  ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.முத்துக்குமார், கே.குமார், எம். பிரபாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற் றனர்.