கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவ டிக்கையின் ஒருபகுதியாக, பள்ளி மாணவர்கள் அவ்வப்போது சோப்பினை கொண்டு கைகளை சுத்தம் செய்வதை, தலைமை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தர விட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பில், பள்ளி மாணவர்க ளுக்குத் தேவையான சோப்புக் கட்டிகளை பள்ளியின் சிறப்பு நிதியிலிருந்தோ அல்லது பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்தோ வாங்கி பயன்படுத்த வேண்டும். அடிக்கடி கைகளை கழுவுதல் உள்ளிட்ட சுய சுகாதாரத்தின் மூலம், கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க முடியும் என்பதை, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துக் கூற வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.