tamilnadu

img

டெங்கு பாதிப்பு : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

டெங்குவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெங்குவை கட்டுப்படுத்தவும், உயிரிழப்புகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்தார். இதில் சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் டெங்கு கொசு பரவுவதாக குற்றம் சாட்டினார். மேலும் டெங்குவை கட்டுப்படுத்த ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்றும், டெங்குவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், டெங்குவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்து வைக்கப்பட்டுள்ளதை குறித்து மாநகராட்சியும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். 

;