தருமபுரி, ஆக. 7- மத்திய அரசின் சுற்றுசூழல் தாக்க மதீப்பீடு வரைவு அறிக் கையை திரும்பப் பெற வலியுறுத்தி சமூக நல்லிணக்கமேடை சார்பில் தருமபுரி மாவட்ட தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்தியில் ஆளும் மோடி தலை மையிலான பாஜக அரசு தொடர்ந்து மக்களுக்கு எதிரான பலமுனைத் தாக்குதல்களைத் தொடுத்து வருகி றது. இதன் ஒரு அங்கமாக சமீபத் தில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள் ளது. இது நடைமுறைக்கு வருமா னால் நாட்டின் வளம் கேள்விக்குறியா கும். எனவே, இந்த சுற்றுசூழல் வரைவு அறிக்கையைக் திரும்பப்பெற வேண்டும். எட்டுவழிச்சாலை திட்டம் உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங் களை அமல்படுத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தருமபுரியில் சமூக நல்லிணக்கமேடை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் மண்டலச் செயலாளர் பொ.மு.நந்தன் தலைமை வகித்தார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் ஏ.குமார், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் யாசின் தென்றல், சுற்றுப்புறச் சூழல் பாது காப்பு இயக்க மாவட்டச் செயலா ளர் கலாம், தோழி கூட்டமைப்பு தலை வர் சங்கர், மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயாஸ், சமூக நல்லிணக்க மேடை பொறுப்பாளர்கள் இ.பி.பெருமாள், ரா.சிசுபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.