மும்பையில் அம்பேத்கர் வீட்டை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அம்பேத்கர் சிலை பாதுகாப்பு கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, தமிழ்புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் த.க.உதயபிரகாஷ், பகுஜன் சமாஜ் சந்தியூர் பார்த்திபன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.