tamilnadu

img

ஊரடங்கு நீட்டிப்பா?

பாதிப்புக்கேற்ப முடிவெடுக்கப்படும்: முதல்வர்

சென்னை, ஏப்.9- கொரோனா வைரஸ் பாதிப்பின் நிலை மைக்கு ஏற்ப ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  தமிழக முதலமைச்சர் பழனிசாமி, கொரோனா தடுப்பு பணிகளில் பணியாற்றி வரும் 12 குழுக்களுடன் வியாழனன்று ஆலோ சனை நடத்தினார். பின்னர் முதலமைச்சர் செய்தியாளர்களி டம் கூறியதாவது: 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் 12 குழுக்கள் திறம்பட செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். விமான நிலையங்களில் 2.10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடை பெற்றுள்ளது. 19 ஆய்வகங்கள் மூலம் கொரோனா பரிசோதனை நடைபெற்று வரு கிறது. 6,095 பேருக்கு இதுவரை சோதனை நடைபெற்றுள்ளது. 344 பேரின் முடிவுகள் வரவேண்டியுள்ளது.

கொரோனா தடுப்புக்கான மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் கையிருப்பில் உள்ளன. முகக் கவசம், மாத்திரைகள் போதிய அளவுக்கு உள்ளன. 32,371 தனிமைப்படுத்தப் பட்ட படுக்கைகள் தயாராக உள்ளன. 3371 வெண்டிலேட்டர்கள் தயாராக உள்ளன. கொரோனா நோயாளிகளுக்காக 14,525 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. திரு மண மண்டபங்களில் 73,863 பேர் தங்க வைக் கப்பட்டுள்ளனர். சுமார் 3 லட்சம் வெளிமாநில தொழிலாளர்களின் தகவல்கள் சேகரிக்கப் பட்டுள்ளது.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின் னர், விதிமீறலில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட் டுள்ளது.  2,500 வென்டிலேட்டர்கள் வாங்கவும் மற்றும் 4 லட்சம் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’கள் வாங்கவும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் தமிழகத்திற்கு 50 ஆயிரம் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’கள் இன்றிரவு வந்து சேரும். கொரோனா பாதித்தவர்களுக்கு முதலில் பரி சோதனை மேற்கொள்ளப்படும். கொரோனா வை மறைப்பது கண்டுபிடிக்கப்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்டை மாநிலங்களில் இருந்து மளிகை பொருட்கள் கூட்டுறவுத்துறை வழியே வாங்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடு தேடி உதவிகள் வழங்கப்படும்.  கொரோனா சிகிச்சை அளிக்க 137 தனி யார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்து வமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஊர டங்கு நீட்டிப்பு என்பது கொரோனா பாதிப்பின் நிலைமைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும். தமிழகத்தில் இரண்டாம் நிலையில் உள்ள கொரோனா மூன்றாம் நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. 

மக்கள் தங்களால் இயன்ற நிதியை அர சுக்கு வழங்க வேண்டும். பொதுமக்கள் ரூ.100 கூட நிதி வழங்கலாம். 10 ஆம் வகுப்பு தேர்வை மாணவ மாணவியர்கள் எழுத வேண்டியது அவசியம். ஏனெனில், 10 ஆம் வகுப்பு தேர்வு என்பது ஒருவர் அடுத்த கட்டத்துக்கு நகர்வ தற்கான தேர்வாகும். அதனால் தேர்வு எப்பொ ழுது என்பது பற்றி ஆலோசனை மேற் கொண்டு முடிவு செய்யப்படும். இவ்வாறு முதல்வர் கூறினார்.