சென்னை, அக். 10- சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் உதவி ஆய்வாளராக பணி புரிந்து வந்தவர் சிவக்குமார் (55). இவர் காவல்துறை யினருக்கு சங்கம் வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கை களை தொடர்ந்து எடுத்து வந்தார். அதற்காக அவர் பல்வேறு இடையூறுகளை யும் சந்தித்தார். இவருக்கு காவலர் சங்கம் என்ற ‘பைத்தியம்’ முத்தி விட்டது என்றும் மன நலம் பாதிக்கப்பட்டு விட்டது என்றும் கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பினர். பிறகு, மீண்டும் பணியில் சேர்ந்ததும் தமிழ்நாடு காவல்துறை காவலர் சங் கம் என்ற பெயரில் முறையாக பதிவு செய்து காவலர்கள் சங்கத்தின் தலைவராக செயல்பட்டு வந்தார். அதன் பிறகு சுமார் 18 வருடங்க ளாக சங்கத்தின் அங்கீகாரம் கேட்டு கிட்டத்தட்ட இரண்டு மூன்று முறை டிஜிபியை சந்தித்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இன்னமும் அந்த வழக்கு முடிய வில்லை. தற்போது உச்ச நீதிமன்றத்திலும் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆனால் இவரது குரலை காவல் துறை உயர் அதிகாரி களும், தமிழக அரசும் கண்டு கொள்ளவே இல்லை. காவ லர்களுக்காக அமைக்கப் பட்ட சங்கத்திற்கு அங்கீகா ரம் பெற்று காவல்துறை யினருக்கு பக்க பலமாக செயல்பட பாடுபட்டு வந்தார். இந்நிலையில், வியாழ னன்று (அக்.10) அதிகாலை யில் சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை குடியிருப்பு இல்லத்தில் சிவக்குமா ருக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக குடும்பத்தினர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்து வர்கள் அவர் மரண மடைந்துவிட்டதாகக் கூறி னர். இவரது மறைவு காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது. மறைந்த உதவி ஆய்வா ளர் சிவக்குமார் கடந்த 1988 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்தார். அவ ருக்கு மனைவியும் இரண்டு மகள், ஒரு மகனும் உள்ள னர்.