tamilnadu

img

ஐ.ஏ.எஸ் கனவை அடைந்த கரூர் விவசாயி மகள்

கரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயியின் மகள் அபிநயா ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று தனது பெற்றோருக்கு பெருமை சேர்த்துள்ளார்.இவர் கரூரில் பள்ளி படிப்பை முடித்து,கோவையில் விவசாயக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.பின்(டி,என் .பி .எஸ்.சி) யில் வெற்றி பெற்றார்.ராமநாதபுரத்தில் இருக்கும் பரமக்குடி வேளாண்மை அலுவலகத்தில் வேளாண் அலுவலராக பணிக்குச் சேர்ந்தார்.இருந்தாலும் தனது கனவு ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பதற்க்காக கடுமையாக முயற்ச்சி செய்து படித்து வந்தார்.இந்த ஆண்டு 2019 சிவில் சர்வீஸ் தேர்வை எழுதினார் . தற்போது தேர்வு முடிவுகள் வெளியானது,அதில் 559 வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.இதை பார்க்கும் போது விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பது  போல தொடர்ந்து முயர்ச்சி செய்தால் வெற்றி நிச்சயம் என்பது தெளிவாகிறது.