tamilnadu

img

ஏப்.30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஏப்.13-  கொரோனா நோய் உலகையே அச்சுறுத்தி வருகின்றது.இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமலில் உள்ள ஊர டங்கு தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: 

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில், கடந்த மார்ச் 24 அன்று மாலை 6 மணி முதல் 31 ஆம் தேதி வரை ஊர டங்கு உத்தரவு முதலில் பிறப்பிக்கப்பட்டது. பின்னர் மத்திய அரசு அதை ஏப்ரல் 15 அன்று காலை வரை நீட்டித்தது. ஊரடங்கு உத்தரவு தீவிர மாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதன் காரணமாக தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பெரிய அளவில் பரவாது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில், தற்போது உள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாகவும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தொடர் பாக மாநிலங்கள் எடுத்து வரும் நடவடிக்கை களையும் பிரதமர் காணொலிக் காட்சி மூலமாக ஏப்ரல் 11 அன்று கலந்தாய்வு மேற்கொண்டார். இக்கலந்தாய்வின்போது, தமிழ்நாட்டில் மேற் கொள்ளப்பட்டு வரும் பல்வேறு தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளும், தமிழ் நாட்டிற்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் எனவும் பிரதமரி டம் நான் எடுத்துரைத்தேன். 

மேலும் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தர வினை நீட்டிக்க வேண்டும் என்ற என்னுடைய கருத்தினை தெரிவித்தேன். நானும், மற்ற முதல மைச்சர்களும் கொரோனா நோய்த் தடுப்பு நட வடிக்கையான ஊரடங்கு உத்தரவினை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினோம். 

பிரதமரின் கலந்தாய்வுக் கூட்டத்தின் நட வடிக்கைகளின் அடிப்படையிலும், உலக சுகா தார அமைப்பின் கருத்தின்படியும், மருத்துவ நிபு ணர் குழு மற்றும் பொது சுகாதார வல்லுநர் குழுக்களின் பரிந்துரைகளின் படியும், மாநி லத்தில் ஊரடங்கை தளர்த்தினால், நோய்த் தொற்று அதிகரிக்கக் கூடும் என்பதை கருத்தில் கொண்டும் ஏப்ரல் 11 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படியும், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் படியும், குற்றவியல் விசாரணை முறை சட்டப் பிரிவு 144-ன் படியும், ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது.  கொரோனா நோய்த் தொற்றினை தடுக்கும் நோக்கில், பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் படியும், குற்றவியல் விசாரணை முறை சட்டப் பிரிவு 144-ன் படியும், தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் அனைத்து கட்டுப்பாடு களும் தொடரும். 

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொருள் 

*    ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் கார ணத்தினால், தமிழ்நாட்டில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தி யாவசியப் பொருட்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு எப்பொழுதும் வழங்கப் படும் அரிசி ஆகியவை நியாய விலைக் கடை களில் விலையின்றி வழங்கப்படும். 

*    கட்டடத் தொழிலாளர்கள் உட்பட பதிவு பெற்ற அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கும், குடும்பம் ஒன்றுக்கு இரண் டாவது முறையாக 1,000 ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும். 

*    பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர் களுக்கு, மே மாதத்திற்காக 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் விலையின்றி வழங்கப்படும். பல்வேறு தரப்பினரிடமிருந்து வந்த கோரிக் கைகளை பரிசீலித்து, தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலான காலத்தில், அடுமனைகள் (பேக்கரி) இயங்க தடை யில்லை என்பதையும், ஏற்கனவே, உணவகங்க ளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி அடுமனைகளிலும் பார்சல் விற்பனை மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெளிவுபடுத்தப்படு கிறது. 

*   மேலும், சென்னை மாநகராட்சி பகுதி யில் உள்ள மக்கள், கொரோனா நோய் தொடர் பான தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள டெலி மெடிசின் சொஸைட்டி ஆப் இந்தியா நிறு வனத்தில் பதிவு பெற்ற சிறந்த மருத்துவர் களைக் கொண்டு, தொலை மருத்துவ முறை மூலம் தங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு தெளிவு பெற தமிழ்நாடு அரசு வழிவகை செய்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு குடும்பமும் பாதுகாப்பாக இருப்பது தான் அரசுக்கு மிகவும் முக்கியமானது.  ஆகவே, தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்படு கின்ற அனைத்து வழிமுறைகளையும் தவறா மல் பின்பற்றி, “விழித்திருங்கள், விலகி இருங்கள், வீட்டில் இருங்கள்” என்ற கோட்பாட் டின் அடிப்படையில், சமூக இடைவெளியை கடைப்பிடித்து, கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு வரையும் வேண்டி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

;