நாகர்கோவில், அக்.8- குமரி மாவட்டத்தில் முகநூல் பதிவுக்காக கைது செய்யப்பட்ட ஜெயன் மீதான வழக்கை ரத்து செய்து, அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் களியக்காவிளையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த ஜெயன், அந்த பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செய லாளராகவும், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினராகவும், கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் வட்டார செயலாளராகவும் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். இவர் மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து பல போராட்டங்களில் பங்கேற்பதுடன், முகநூலிலும் பகிர்ந்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் இவர் மற்றொருவரது முகநூல் பதிவை தனது முகநூல் நண்பர்களு டன் பகிர்ந்துள்ளார். இதையும், கடந்த 2018 ஆம் ஆண்டு இவர் தனது முகநூல் பக்கத்திலிருந்து நீக்கிய ஒரு பதிவையும் காரணம் காட்டி பாஜகவினர் இவருக்கு எதிராக காவல் நிலையத்தில் பொய்ப்புகார் அளித்த னர். அதன் பேரில் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்து ஜெயனை போலீசார் கைதுசெய்தனர். இதனை கண்டித்தும், கைது செய்யப்பட்ட ஜெயன் மீதான வழக்கை ரத்து செய்து, விடுதலை செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் மார்த்தாண்டம் வட்டார செயலாளர் வி.அனந்தசேகர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.செல்ல சுவாமி, மாநிலகுழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ் ஆகியோர் பேசினர். இதில், கட்சியின் வட்டார செயலாளர்கள் ஜாண், சிதம்பர கிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் தங்கமணி, சசிகுமார், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கே.பி.பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். (ந.நி.)