tamilnadu

img

மதுரையில் கொரோனா சோதனை 2500 ஆக உயர்வு

சு. வெங்கடேசன் எம்.பி., பாராட்டு

மதுரை, ஜூன்19- மதுரை  மக்களவை உறுப்பினர்  சு. வெங்கடே சன்  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு: வியாழனன்று மதுரை மருத்துவக்கல்லூரி நுண்ணுயிரி துறையில் கொரோனா சோதனை என்பது ஒரே நாளில் 2500 என்ற எண்ணிக்கை யில் நடத்தப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களாக மதுரைக்கு வருப வர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிக மானதை தொடர்ந்து நாள் தோறும் 3000 எண்ணிக்கையில் சோதனை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

இந்நிலையில் இதுவரை இல்லாத அள வுக்கு 2500 சோதனைகளை ஒரே நாளில் நடத்தியதற்காக நுண்ணுயிரி துறைத்தலைவர் மற்றும் ஆய்வாளர்கள், ஆய்வக உதவி யாளர்கள், மருத்துவமனை முதல்வர் ஆகியோ ருக்கு எனது வாழ்த்துகள். தேவையை புரிந்து கொண்டு சோதனையின் எண்ணிக்கையை உயர்த்த முயற்சித்த மாவட்ட ஆட்சியருக்கும்  பாராட்டுகள். நாம் முழுமையான சவால்களை நோக்கி நடந்து கொண்டிருக்கின்றோம். எனவே வரும் நாட்களில் சோதனையின் எண்ணிக்கை குறைந்து விடாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

;