உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விழிப்புணர்வுக் கூட்டம் தமிழ்நாடு காவல்துறை சார்பில் சென்னை, முகப்போர் கிழக்கு வேலம்மாள் நிறைநிலை மேனிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அண்ணா நகர் சரகத்திற்குட்பட்ட துணை ஆணையர், உதவி ஆணையர், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.