tamilnadu

img

2வது கட்டத்தில் கொரோனா வைரஸ்

சென்னை, ஏப்.3- தமிழ்நாட்டில் 17 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. இந்த வாரத்தில் கூடுதலாக  6 கொரோனா பரிசோதனை லேப்புகள் இணைக்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளா கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கை யில் தமிழ்நாட்டில் கொரோனா வால் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது என்றும் கொரோனா பரவல் சமுதாய தொற்றாக மாறாமல் தடுப்பதற்கான ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் கூறினார். தமிழ் நாட்டில் கொரோனா தொற்றுநோய் பரவல் 2ஆம்  நிலையில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.