லண்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய நாவல் கொரோனா வைரஸ் நோய்க்கான (கோவிட் -19) தடுப்பூசி பரிசோதனையில் 2 மற்றும் 3 கட்ட மனித மருத்துவ பரிசோதனைகளை நடத்தியதற்காக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் புனேவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிற்கு பச்சை கொடி காட்டியுள்ளார். செய்தி : பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா.
1) கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி நிலவரப்படி 1,807,222 பேர் கொரோனாவல் பாதிக்கப்பட்டுள்ளனர்,இது கிட்டத்தட்ட 1.8 மில்லியன் ஆகும்.
2) ஆகஸ்ட் 3 ஆம் தேதி நிலவரப்படி கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 5,79,357 ஆக உள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிகிச்சை பெற்று வீடு திறும்பியவர்களின் எண்ணிக்கை 1,186,203 எனவும், 38,135 பேர் இந்த நோயால் இறந்தனர்,எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
3) உலகெங்கிலும் உள்ள மொத்த பாதிக்கப்ப்ட்டவர்களின் எண்ணிக்கை 17,660,523 பேர் எனவும்,அதில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி நிலவரப்படி 2,62,929 புதியதாக நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 6,80,894 பேர் என உலக சுகாதார அமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
4) ஆகஸ்ட் 3 ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை 1.8 மில்லியன் என்பது உலகெங்கும் பதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில், இந்தியா பத்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.
ஆகஸ்ட் 2 டுவிட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வைரஸின் அறிகுறிகளை உருவாக்கியதாகவும், அவருடன் தொடர்பு கொண்டவர்கள் தங்களையும் தனிமைப்படுத்தும்படி கேட்டுக்கொண்டார்.
ஆகஸ்ட் 2 ம் தேதி தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித்டதுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது என்று செய்தி சேனல் என்.டி.டி.வி தெரிவித்துள்ளது, சென்னையின் காவேரி மருத்துவமனையின் அறிக்கையில் ஆளுநருக்கு லேசான அறிகுறிகள் இருந்தன, மேலும் வீட்டில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி இந்தியாவின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் கொரோனா பரவிக் கொண்டிருக்கும் காலத்தில் ,கடந்த ஜூலை 6 ஆம் தேதி வெளியான செய்திகளில் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் கொரோனாவுக்கான கோவாக்சின் தடுப்பூசி தயாராகி விடும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அறிவித்த நிலையில் , இந்த அறிவிப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் நிறுவனத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாக சர்ச்சையை எழுப்பிய நிலையில் ,
இப்பதான் புனேவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில்(எஸ்.ஐ.ஐ) கொரோனா தடுப்பூசிக்கு மூன்றாம் கட்ட பரிசோதனை நடத்த அனுமதி வாங்கியுள்ளது.அடுத்த ஓரிரு மாதங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு உயர போகிறது என்ற கேள்வியும் ,அச்சமும் எழாமல் இல்லை .மக்களை நோயின் பிடியிலிருந்து காப்பாற்ற அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது மத்திய பாஜக அரசு...?