tamilnadu

img

கொரோனா சிறப்பு மருத்துவமனையாக பல்நோக்கு மருத்துவமனை

சென்னை, மார்ச் 27- கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  குறிப்பாக சென்னையில் ஒரே நாளில்  இரண்டு நபர்களுக்கு உறுதி செய்யப் பட்டுள்ளதால் அரசும் சுகாதாரத் துறையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்திருக்கிறது. இந்நிலையில், தலைமைச்செயலக மாக கட்டப்பட்டு அதன்பின்னர் பல்நோக்கு  சிறப்பு மருத்துவமனையாக மாறிய சென்னை ஓமந்தூர் பல்நோக்கு மருத்துவ மனை, தற்போது கொரோனா சிறப்பு  மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ள தாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தனது டுவிட்டரில் தெரி வித்துள்ளார்.

இந்த மருத்துவமனையில் 350 பெட்கள் கொண்ட தனித்தனி வார்டுகள், நோயாளிகளை தனிமைப்படுத்தப்படும் வசதி, கொரோனா சிகிச்சைக்கு தேவை யான வசதிகள் அனைத்தும் இருப்பதாக வும், இந்த கொரோனா சிறப்பு மருத்துவ மனையை தானே நேரில் பார்த்து ஆய்வு செய்து திருப்தி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே இனிமேல் கொரோனா வைர ஸால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.