tamilnadu

img

குஜராத்தில் கொரோனா ஹோட்டல்

அகமதாபாத், மே 9- இந்தியாவில் கொரோனா என்ற பெயர் 2015-ஆம் ஆண்டே பயன் பாட்டிற்கு வந்துவிட்டது. தற்போது பரவி வரும் வைரஸ்க்கும் கொரோனா பெயரி டப்பட்டுள்ளது. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் கொரோனா என்றால் என்னவென்றே தெரி யாத நிலையில், தற்போது கொரோனா என்ற பெயர் ஆட்கொல்லி வைரஸ் என உலக நாடுகளை எச்சரித்து வருகிறது. இந்த நிலையில் குஜராத்தில் கொரோனா பெயரில் உணவகம் தொடங்கப் பட்டுள்ளது. 

குஜராத் -இராஜஸ்தான் மாநில எல் லையில் குஜராத்தின் வடக்கு மாவட்ட மான பானஸ்கந்தா மாவட்டத்தில் இந்த உணவகம் உள்ளது. இராஜஸ்தானின் ஜோத்பூர் பாலி நெடுஞ்சாலை வழி யாக குஜராத் வரும் சுற்றுலாப் பயணி கள் இந்த உணவகத்தில் சாப்பிட்டு விட்டுச் செல்கின்றனராம். நாடு தழுவிய ஊரடங்கால் உணவகம் மூடப்பட்டுள் ளது. ஆனால் அந்த வழியாக வருபவர் கள் உணவகத்தின் பெயரைப் பார்த்து விட்டு மொபைலில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக்கொள்கின்றனர். இது குறித்து இந்த உணவகத்தின் உரிமையாளர் பரக்கத்பாய் வடக்கு குஜ ராத்தில் உள்ள சித்பூரில் வசிக்கிறார். அவர் கூறுகையில், “2015-ஆம் ஆண்டு இந்த உணவகத்தைக் கட்டினேன். கொரோனா என்றால் உருது மொழி யில் “காலா” எனக் கூறினார். இருந்தா லும் கொரோனா என்ற பெயர் பிடித்திருந் ததால் அந்த பெயரை ஹோட்டலுக்கு வைத்தேன்” என்றார்.