ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் வெற்றி பெற்ற பிரதிநிதிகளுக்கான மாநாடு வெள்ளியன்று(ஜன.31) திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மக்களவை, மாநிலங்களவை, சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.