tamilnadu

img

பாஜகவை கண்டித்து காங். போராட்டம்

சென்னை,ஜூலை 24- மத்திய பாஜக அரசின் ஜனநாயக விரோத நடவ டிக்கையை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி யின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துறை சார்பில்  ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கே.எஸ். அழகிரி  அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்  2004 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது தகவல் அறி யும் உரிமைச் சட்டம்.  இதுவரை இச்சட் டத்தை 70  லட்சம் பேர் பயன்படுத்தியிருக்கின்றனர். இது மக்க ளிடையே எழுந்துள்ள விழிப்புணர்வை வெளிப்  படுத்துகிறது. இதை மத்திய பாஜக ஆட்சியாளர்க ளால் சகித்துக் கொள்ள முடிய வில்லை. அந்த ஆணையத்தில் பல்வேறு பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளது. மேலும், 26,000 மனுக்கள்  மேல் முறையீட்டிற்காக நிலுவையில் உள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் இந்த அமைப்பை  முடக்கி வைக்கிற பணியை பாஜக செய்து வந்தது. இச் சட்டத்தை திருத்துகிற மசோதா தாக்கல் செய்  யப்பட்டது. அப்போது எழுந்த கடுமையான எதிர்ப்பு  காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது உள்ள அசுர பலத்தினால் தகவல் அறியும் உரி மைச் சட்டத்தின் பிரிவுகள் 13, 16 மற்றும் 27-ல் திருத்  தங்கள் கொண்டு வந்து மக்களவையில் நிறை வேற்றப்பட்டு விட்டது. மத்திய பாஜக அரசின் ஜன நாயக விரோத நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துறை சார்பில் விரைவில் சென்னை யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.