tamilnadu

img

கொரோனா வைரஸ் குறித்து தமிழில் காலர் டியூன்: பொதுமக்கள் கோரிக்கை

சென்னை,மார்ச் 10- கொரோனா வைரஸ் குறித்த செல்போன் காலர்  டியூன் விழிப்புணர்வு பிரச்சாரம் தமிழ் மொழியில் இருக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உயிர் கொல்லியான கொரோனா வைரஸ் சீனா  மட்டுமின்றி தற்போது உலகின் பல்வேறு நாடு களுக்கும் வேகமாக பரவி உள்ளது. இதில் இந்தியா வும் தப்பவில்லை. வெளிநாடுகளில் இருந்து இந்தி யாவுக்கு வந்தவர்களால் தில்லி ,கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 40க்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் குறித்தும், முன்  னெச்சரிக்கையாக எப்படி நடந்து கொள்ள வேண்டும்  என்பது பற்றியும் பொது மக்களுக்கு பல்வேறு விழிப்பு ணர்வு பிரச்சாரங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு செல்போனில் காலர் டியூன் வழியாக மத்திய அரசு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வரு கிறது. அதாவது ஒருவருக்கு போன் செய்யும் போது  வழக்கமான ரிங்க்கு பதிலாக கொரோனா வைரஸ்  சம்பந்தமான விழிப்புணர்வு வாசகங்கள், தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ளிட வற்றை பற்றி பேசுவது போல் அந்தக் காலர் டியூன்  அமைந்துள்ளது. இது அரசு மற்றும் தனியார்  செல்போன் நெட்வொர்க்கில் செயல்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் இந்த விழிப்புணர்வு வாசக மானது அந்தந்த மாநில மொழிகளில் இல்லாமல் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாமர மக்கள் முதல் அனைத்து தரப்பினரும் செல்போன் பயன்படுத்துகின்றனர். அவர்கள் போன்  செய்யும் போது இருமலுடன் தொடங்கும் காலர் டியூனால் வேறு யாருக்காவது மாற்றி போன் செய்து  விட்டோம் என நினைக்கின்றனர். எனவே, தமிழ கத்தில் தமிழ் மொழியில் இருந்தால் மட்டுமே அனைத்து மக்களுக்கும் புரியும். அப்படி செய்தால் அனைத்து தர மக்களுக்கும் கொரோனா பற்றிய விழிப்புணர்வை அறிந்து கொள்ள முடியும் என்றனர்.  பொதுமக்களும் காலர் டியூன் தமிழ் மொழியில் இருக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றனர்.