tamilnadu

img

சாணத்தால் செய்யப்பட்ட “சிப்” போலி அறிவியலின் உச்சம்...

ராஷ்ட்ரீய காமதேனு ஆயோக் என்ற அரசு நிறுவனத்தின் தலைவர்  வல்லபாய் கதிரியா என்பவர் பசுஞ்  சாணத்தால் செய்யப்பட்ட சிப் செல்போன் கதிர்வீச்சை தகுந்த அளவு குறைத்து பாதுகாப்புத் தரும்  எனகடந்த  திங்கட்கிழமை அறிவித்து உள்ளார். இந்த ஆயோக் மீன்வளம்,கால்நடை, பால் வளம் உள்ளிட்ட மத்திய அமைச்சகத்தின் கீழ்வருகிறது.  பிப்ரவரி 2019ல் இந்த அமைச்சகத்தின்கீழ் உருவாக்கப்பட்டது.  பசுக்களையும் அதன்தலைமுறைகளையும் பாதுகாப்பது இதன் நோக்கமாகக் கூறப்பட்டுள்ளது. 2019 - 20 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கவ்சத்வா கவச் என்று பெயரிடப்பட்ட இந்தசிப் ராஜ்கோட்டில் ஸ்ரீகௌசாலாவில் தயாரிக்கப்பட்டு வருகிறதாம்.தேசிய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காமதேனு தீபாவளி  அபியான் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பசுஞ்  சாணப் பொருட்களைப் பிரபலப்படுத்தும் வகையில்  பசுவின்சாணம் கதிர்வீச்சு எதிர்ப்பு சக்தி கொண்டதென்றும் இந்த பசுஞ் சாண சிப் செல்போனின் கதிர்வீச்சை மிகவும் குறைக்கும் தன்மை கொண்டது என வல்லபாய் கதிரியா தெரிவிக்கிறார்.பசுஞ்சாண சிப்பை உயர்த்திக் காட்டி இதைசெல்போனில் வைத்துக் கொண்டால் கதிர்வீச்சை குறைக்கும் என்றும் நோய்களைக் குறைக்க வேண்டுமென்றால் இதனைப் பயன்படுத்த வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளார்.சில நாட்களுக்கு முன்னர் நடிகர் அக்சய் குமார்பசுஞ்சாணத்தைத் தின்றார் என்றும் அதன் சிறுநீரைக் தினசரி குடித்தார் என்றும் அதற்கு ஆயுர்வேதப் பயன் உள்ளது என குறிப்பிட்டுள்ளார் என்பதை நினைவுபடுத்தியும் பேசியுள்ளார். இப்பொழுது நாங்கள் இதன் மீது ஆய்வுகளைத் துவக்கியுள்ளோம் என்றும் இதுபோன்று கற்பனையாகக் கருதப்பட்டு வந்தவைகள் மீது பல ஆய்வுகளைச் செய்ய உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

பல பசுஞ் சாணப் பொருள்களைக் கண்காட்சிகளில் வைத்துப் பேசிய அவர் பசுஞ்சாணம் கதிர்வீச்சைக் கட்டுப்படுத்தும் என்றும் இதை வீட்டில் வைத்தால் வீடு கதிர் வீச்சற்றதாக மாறும்என்றும் அறிவியல் ரீதியாக இது ஒப்புதல் பெற்றுள்ளது என்றும் கூறுகிறார். சாண சிப்ஸ்கள் சுமார்  500 பசு பாதுகாப்பு மையங்களில் இருந்து உருவாக்கப்படுகின்றது என்றும் கூறுகிறார். ஒரு சிப்பின் விலை 50 முதல்100 ரூபாய்க்குக் கிடைக்கும் என்கிறார். அமெரிக்காவிற்கு ஒருவர் இதனை ஏற்றுமதி செய்கிறார் என்றும் அங்கு அதன் விலை பத்து டாலர்ஆகும் என்று கூறி நம்மைப் புல்லரிக்க வைக்கிறார்.இதைத் தயாரிப்பதற்கு அரசு நிதியுதவி செய்கிறதா எனக் கேட்ட பொழுது நாங்கள் பசுஞ்சாணம் கதிர்வீச்சைத் தடுக்கும் திறன் கொண்டதுஎன்பதை மக்களிடம் பிரச்சாரமாக எடுத்துச் செல்வதற்காக உற்பத்தி செய்கிறோம் என்றார்.

இது சோதனைச் சாலையில் சர்டிபிகேட் பெற்றதாஎன்று கேட்கும் பொழுது சர்ட்டிபிகேட் பெறவில்லை  என்றும் ஆனால் சோதித்துப் பார்க்கப்பட்டது என்றும் எந்த சோதனைச்சாலையிலும் ஏன் கல்லூரியில் கூட சோதித்துப் பார்க்கலாம் என்றார். (எந்தக் கல்லூரியில் கதிர்வீச்சுகள் சோதனை செய்யும் உபகரணங்கள் இருக்கிறதோதெரியவில்லை)இந்த காமதேனு தீபாவளி அபியான் பிரச்சாரஇயக்கத்தின் போது பசுஞ்சாணத்தில் தயாரிக்கப்பட்ட தீபச் சட்டிகள், மெழுகு வர்த்திகள், ஊது பத்திகள், பேப்பர் வெயிட்டுகள்,  கடவுள்கள்சிலைகள் ஆகியனவற்றையும் விற்பனைக்குக் கொண்டு செல்கிறார்கள்.

அது சரி சாணச் சிப் உண்மையிலேயே கதிர்வீச்சைத் தடுக்குமா....? 
சாண சிப்பில் மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ் இருப்பது போல் தெரியவில்லை.  அது வெறும்  காய்ந்த சாணத் துண்டாக இருக்கிறது என்கின்றனர். டாட்டா இன்ஸ்டிட்யூட் ஆப் பன்டமென்டல் ரிசர்ச் விஞ்ஞானி பேரா.அமோல் தீகே என்பவர் அறிவியலில் செய்து காட்டி விளக்க வேண்டும்.அப்படி இந்த சிப் கதிர்வீச்சைத் தடுக்குமென்றால்அதன் மீது செய்யப்பட்ட சோதனை வகைகளையும் முடிவுகளையும் பொது வெளியில் குறிப்பிடவேண்டும் என்கிறார். காமதேனு ஆயோக் வெப்சைட்டில் சென்று பார்த்தால் இது போன்ற ஆராய்ச்சி ஆதாரங்கள்  எதுவும் காணப்படவில்லை என்றும் இது குறித்து ஈ மெயில் வழியாகவிளக்கம் கேட்டுள்ளோம் என்றும் கூறுகிறார். மேலும் அவர் கூறுகையில், நமக்கு சுமார் 50-100 வருடங்களாக கதிர்வீச்சு பற்றித் தெரியும்.ஆனால் சாணம் போன்ற அங்ககப் பொருட்களால் கதிர் வீச்சை உறிஞ்ச முடியும், குறைக்க முடியும், தடுக்க முடியும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார். மேலும் கதிர் வீச்சுகள் பலவகை என்றும் அதில் எந்தவிதமான கதிர்வீச்சைசாண சிப்ஸ்கள் தடுக்கின்றன என கேட்கிறார். சாதாரண ஒளி கூட ஒரு கதிர் வீச்சு தான் என நையாண்டி வேறு செய்கிறார்.மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி அவர்கள் இதுபோன்ற கற்பனைசார்  கண்டுபிடிப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன என்றும் அறிவியல் அறிஞர்கள் தொடர்ந்து இதை மறுத்து வருகின்றனர் என்றும் சாண சிப்  கதிர்வீச்சைத் தடுக்கும் திறன் கொண்டது என்பதற்கு இதுவரை  எந்தவிதமானதரவுகளும் இல்லை என்றும் கூறுகிறார்.

இந்திய இயற்பியலாளர் கே. என் உத்தம் என்பார் 2011ல் டைம்ஸ் ஆப் இந்தியாவில் பசுஞ்சாணம் ஆல்பா, பீட்டா, காமாக் கதிர்களை உறிஞ்சும் தன்மை கொண்டதென்று கூறியிருக்கிறார். அதன்படி எடுத்துக் கொண்டாலும் செல்போனில் இந்த கதிர் வீச்சுகள் எதுவும் இல்லையென்றும் ரேடியோ அலைகள் மட்டுமேஅதில் வெளி வருகிறதென்றும் அதற்கு கதிர்வீச்சுத் தன்மை இல்லை என்றும் கூறுகிறார். பசுஞ்சாணம் கதிர்வீச்சைத் தடுக்கும் என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களோ சோதனைசார் தரவுகளோ இல்லாத போது உத்தம் அவர்களும் எந்தவிதமான  அறிவியல் வெளியீடுகளையும் அவரேகூட  வெளியிடவி்ல்லை என்கிறார். புதுதில்லி அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ரகுநந்தன், இதை சிப் என்று அழைப்பதே வேடிக்கையாக இருக்கிறதென்றும் இதில் எந்த விதமான மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ் பொருளும் இல்லாத போது இது வெறும் சாணத் துண்டு தான் என்கிறார்.அப்படியே செல்போன் சாதனங்களில் இருந்து கதிர்வீச்சுகள்அதிகம் வருகிறதென்றால் அதை அரசிடம் தெரிவித்தோ நிதி ஆயோக்கிடம் அல்லது டெலிகாம் துறையிடம் தெரிவித்தோஅதைக் கட்டுப்படுத்துவதை கோரிக்கையாக வைக்கலாமே என்கிறார். செல்போன்களில் இருந்து கதிர்வீச்சுகள் எதுவும் வருவதில்லை எனவும் ரேடியோ அலைவீச்சு வருகிறதென்றும் இந்த அலைகள் செல்களில் உள்ள அயனிகளை அழிக்கும் ஆல்பா, காமா, பீட்டா கதிர்கள் போல் இல்லையென்றும் அதிக பட்சம் சில செல்போன்களைப் பயன்படுத்தினால் வெப்பம் உமிழும் தன்மை கொண்டது என்றும் கூறுகின்றன பல தரவுகள். அதிக வெப்பம் உமிழும் செல்போன்கள் பட்டியலையும் பகிரங்கமாக வெப்சைட்டில் வெளியிட்டு உள்ளனர். நீங்களே பார்க்கலாம்.மேலும் சாண வரட்டிகளை சுவர் மீது அடித்துவைத்தால் கதிர்வீச்சு வீட்டுக்குள் வராது எனவும்அண்டப் புளுகையும் அவிழ்த்து வி்ட்டுள்ளனர். அப்படியானால் கதிர் வீச்சு அபாயம் உள்ள அணுமின் நிலையங்களின் சுவர்களிலும் உபகரணங்களிலும் பூசி கதிர்வீச்சைத் தடுத்து  மக்களைக்காக்கமுடியுமா? பதில் தாருங்கள் சாண விஞ்ஞானிகளே!

===பேரா. பொ.இராஜ மாணிக்கம்===