tamilnadu

img

போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி

முடிவுகள் அறிவிப்பு 

தேனி, ஜன.2-  போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி ஒருங்கி ணைப்பாளர்கள் அ.உமர் பாரூக், ம. காமுத்துரை, இதயநிலவன் ஆகியோர் தெரி வித்ததாவது: 2019 ஆம் ஆண்டு போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டிக்கான பரிசு பெறும் கதைகளைத் தேர்வு செய்யும் இறுதிக்கட்ட பணி டிசம்பர் 30 அன்று நடைபெற்றது. நடுவர் குழு உறுப்பினர்கள் வரத.ராஜமாணிக்கம், ஸ்டாலின் ஆகியோர் சிறந்த கதைகளை தேர்வு செய்தனர். இறுதிச் சுற்றில் பரிசுக்குரிய கதைகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலா ளரும், சிறந்த சிறுகதையாளருமான எழுத்தா ளர் உதயசங்கரை தலைமையாகக் கொண்ட  நடுவர் குழு இறுதி செய்தது. மொத்தம் போட்டிக்கு வந்த  கதைகள் : 286.

பரிசுபெற்ற சிறுகதைகள் விவரம்:

முதல் பரிசு - வியாபாரிகள் – அரும்பா வூர் இ.தாஹிர் பாட்சா, இரண்டாம் பரிசு: தப்பு தான் – சத்யானந்தன், சென்னை.  மூன்றாம் பரிசு - நில் – முத்துச்செல்வன்

கூடுதல் பரிசுகள்:

1. தேசவிரோதியின் மிஞ்சிய குறிப்புகள் - அ.கரீம், கோவை
2. அவள் ஒரு பூங்கொத்து - தேவகி கருணாகரன், ஆஸ்திரேலியா.
சான்றிதழ் பெறும் கதைகள்:
1. தாய்க்கோழி - சோ.சுப்புராஜ், சென்னை.
2. விவசாயி கனவு - பா. ஏகரசி தினேஷ், திருச்சி
3. மனசு – தங்கேஸ், சின்னமனூர்.
4. கடவுளின் சாயல் - ஐ.கிருத்திகா, திருச்சி.
 

சான்றிதழ்த் தேர்வு பெற்ற சிறுகதை களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். பரிசளிப்பு விழா தேதி மற்றும் நடை பெறும் இடம் ஆகிய விவரங்கள் விரைவில் முடிவு செய்யப்பட்டு, தகவல் தெரிவிக்கப் படும்.


 

;