கொரோனா தொற்று பரவலால் இந்தியா வில் அதிகமாக பாதிக்கப்பட்ட இரண்டா வது மாநிலமாக தமிழகம் உள்ளது. சாதாரண நேரத்திலேயே இரத்தம் கிடைப்பது என்பது சிரமமான ஒரு காரியமாக இருந்து வருகிறது. கொரோனா பேரிடர் காலம் இந்த நிலைமையை மேலும் சிக்கலாக்கி உள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டு 100 நாட்கள் நிறை வடைந்துள்ள நிலையில் இரத்தத்திற்கு சிரமப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த முப்பது ஆண்டுகளாக கணிச மான அளவில் இரத்ததானம் செய்து வரக்கூடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ரத்ததான கழகம், கூடுதலான சிரமங்களும், நெருக்கடிகளும் இருந்தாலும் இப்பணியை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தியது. வாலிபர் சங்க தோழர்களின் அக்கறையும், கவனமும் மக்கள் மீதான அளவற்ற அன்பின் வெளிப்பாடு ஆகும். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு இரத்தம் அவசியமாக தேவைப்படுகிறது என்ற தகவல் வாலிபர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் மதனுக்கு கிடைக்கிறது.
இந்த தகவலை அறிந்த உடனே ரத்த தானம் செய்ய தோழர்களை தொடர்பு கொண்டு தயார் செய்கிறார். உடனடியாக இருசக்கர வாகனத்தில் கிளம்பி 40 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு சென்று இரத்த தானம் செய்கின்றனர். இது ஒரு உதார ணம் மட்டுமே. இதுபோல் ஊரடங்கு காலத்தில் எவ்வித மான வாய்ப்புகளும் இல்லாத தருணத்தில் இரத்த தானம் செய்து உயிர் காக்கும் பணியை வாலிபர் சங்கத் தோழர்கள் நிறைவு செய்து வருகின்றனர். பற்றாக்குறையை சமாளிக்க... காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரத்த தான முகாம் இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யக் கூடிய நேரத்தில் ஏ பாசிடிவ் ரத்தம் பற்றாக்குறையாக உள்ளது என ரத்த வங்கியின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அந்த நேரத்தில் ஏராளமான பேர் ரத்ததானம் செய்ய வந்திருந்த போதும், ஏ பாசிட்டிவ் இரத்த வகையைச் சேர்ந்த 20 தோழர்களை முன்னுரிமையாக தானம் கொடுக்க வைத்து இரத்த பற்றாக்குறை ஏற்படாமல் தடுத்து உள்ள பணி குறிப்பிடத் தக்கதாகும். பொதுவாக சாதாரண காலங்களில் இதுபோன்ற பணிகளை மேற் கொள்ளும் போது குறித்த நேரத்திற்கு நிகழ்வுகளை துவக்குவதில் சிரமங்கள் ஏற்படும். ஆனால் இக்காலத்தில் நடைபெற்ற ரத்ததான முகாம்களில் குறிப்பிட்ட நேரத்தை விட தோழர்கள் முன்பாகவும் கூடுதலாகவும் பங்கேற்றனர்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் இதுவரை திண்டுக்கல் மாவட்டத்தில் 9 ரத்ததான முகாம்களும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 8 ரத்ததான முகாம்களும், கோவையில் ஐந்து முகாம்களும், திருப்பூர் திருச்சி மாநகரில் தலா நான்கு முகாம்களும், மதுரை மாநகர் நெல்லையில் தலா மூன்று முகாம்களும் நடைபெற்று உள்ளன. சில மாவட்டங்களில் தினசரி 10 அல்லது 5 தோழர்கள் சென்று மருத்துவமனையில் ரத்த தானம் செய்துள்ளனர். நெருக்கடி காலமும், சூழலும் இத்தகைய அர்ப்பணிப்பு மிக்க பணியை செய்ய வைத்திருக்கிறது. நெருக்கடி நேரத்தில் மக்களைக் காப்பதற்கு நீளும் முதல் கரமாக வாலிபர் சங்கத்தின் தோழர்களின் கரம் இருக்கிறது என்கிற வரலாறு இப்போதும் கம்பீரத்துடன் தொடர்கிறது.
பல தரப்பினரின் பாராட்டு...
இரத்த தானம் செய்வதற்கு பல்வேறு அமைப்புகளும், தன்னார்வலர்களும் உண்டு. இவர்களுடைய பணி கடந்த காலங்களில் குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் பேரிடர் காலத்தில் பல நபர்களும் கைவிரித்த நிலையில் இத்தகைய பணியை மேற்கொள்ளக்கூடிய வாலிபர் சங்கத்திற்கு மருத்துவர்களும், பொதுமக்களும், செவிலி யர்களும், ரத்த-வங்கி நிர்வாகிகளும் பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு நடத்திய இரத்ததான முகாம்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெறக் கூடியவர்களுக்கு தரக் கூடிய வகையிலேயே மேற்கொள்ளப்பட்டது. போக்குவரத்து வசதி இல்லாத கடைக்கோடி கிராமத்தில் இருந்து வந்து சிகிச்சை பெறக் கூடிய மக்களுக்கு ரத்தம் கிடைப்பதற்கான வாய்ப்பை உருவாக்கித் தர முடிந்திருக்கிறது. பொதுவாக இரத்த தானம் அதிகம் செய்யக்கூடிய நிறுவனங்களாக கல்லூரிகள் தான் இருக்கும். ஒவ்வொரு கல்லூரிகளிலும் ஏராளமான யூனிட்டுகள் ரத்த தானம் செய்வதின் மூலமாக இரத்த வங்கிகளுக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் தற்போது கல்வி நிலையங்கள் இயங்காத சூழலில் இத்தகைய பணி என்பது கடும் நெருக்கடிக்கு உள்ளாகியது. இந்த நிலையில் வாலிபர் சங்க ரத்ததான முகாம்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றன.
ஒரு நாள் இடைவெளியில்...
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தோழர்கள் மகத்தான தியாகிகளின், வீரம் செறிந்த, ரத்தம் தோய்ந்த, வரலாற்றை மனப்பூர்வமாக ஏற்று செயல்பட்டு வரு பவர்கள். தியாகத்தின் மகத்துவத்தை ,பாரம்பரியத்தை அறிந்து முன்னெடுத்துச் செல்லக்கூடிய முறையில் தொடர்ந்து இரத்ததானம் செய்யக் கூடிய பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஊரடங்கு கடுமையாக பின்பற்றக்கூடிய நேரத்தில்கூட வாலிபர் சங்க தியாகிகள் லீலாவதி, அசோக், குமார், ஆனந்தன், சீராணம்பாளையம் பழனிச்சாமி ஆகி யோர் நினைவு தினத்தில் இரத்த தான முகாம்கள் நடைபெற்றன.
ஏப்ரல் 24 காலை 10 மணிக்கு பொன்னேரி அரசு மருத்துவமனையோடு தொடர்பு கொண்டு ரத்ததான முகாம் நாளையதினம் (ஏப்ரல் 25) நடத்துகிறோம் என்ற ஆலோசனையை வாலிபர் சங்கத் தோழர்கள் தெரி விக்கின்றனர். இதனைக் கேட்ட மருத்துவர்கள் திரு வள்ளூர் மாவட்ட மருத்துவமனையோடு பேசி அரை மணி நேரத்தில் உறுதி செய்கின்றனர். ரத்ததானக் கழகத் தோழர்கள் அனைவருக்கும் விரைவாக தகவல் தரப்படு கிறது. அடுத்த 24 மணிநேரத்தில் ஏப்ரல் 25ஆம் தேதி யன்று இரத்ததான முகாம் துவங்குகிறது. தோழர்கள் குவிய துவங்குகிறார்கள். இந்த முகாமில் 102 தோழர்கள் இரத்ததானம் செய்கிறார்கள். கூடுதலான தோழர்கள் இருந்தாலும் அதற்கு மேல் ரத்த வங்கி யால் ரத்தம் சேகரிக்க முடியாத நிலைமை ஏற்படு கிறது. மற்றவர்களின் இரத்த வகையை குறித்து வைத்து விட்டு முகாம் நிறைவடைகிறது. இம்முகாமில் வாலிபர் சங்கத்தின் முன்னாள் பகுதி செயலாளர் தோழர் நாகராஜ் அவருடைய தந்தை, அண்ணன், உறவினரோடு நான்கு பேர் ரத்த தானம் செய்கின்றனர். இதுபோன்ற ஈடுபாடு அனைவருக்கும் மேலும் உற்சாகத்தை தருகிறது.
இம் முகாம்களில் கூடுதலாக இளம்பெண்கள் பங்கேற்பதும், ஆர்வத்துடன் ரத்த தானம் செய்வதும் அதிகரித்துள்ளது. அதேபோல திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் ரத்ததானம் செய்துள்ளார்கள். இது போன்ற உற்சாகம் தரக்கூடிய செய்திகள் ஒவ்வொரு முகாமிலும் உண்டு. கொரோனா ஊரடங்கு காலத்தில் இதுவரை 55 முகாம்களில் 2390 பேரும் அவசர தேவைக்காக மருத்துவ மனைக்கு சென்று 923 பேரும் என 3313 தோழர்கள் ரத்த தானம் செய்துள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் அடுத்தகட்டமாக முகாம் நடத்துவதற்கான திட்டமிடுத லுடன் வாலிபர் சங்கம் களமிறங்கியுள்ளது.
’