tamilnadu

img

உணவு வழங்க மறுத்த பாஜக அரசு: கே.எஸ்.அழகிரி சாடல்

சென்னை, மே 11 - ஏறத்தாழ 10 கோடி மக்க ளுக்கு உணவு தானியங்கள் வழங்க, மத்திய அரசு மறுத்து வரு வதாக கே.எஸ். அழகிரி சாடியுள்ளார். இதுகுறித்து அவர்விடுத் துள்ள அறிக்கையில்  கூறியி ருப்பதாவது:-

 காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது, மக்களிடம் வறுமை யைப் போக்குவதற்காக தேசிய  உணவு பாதுகாப்புச் சட்டம் 2013-ல்  நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத் தின்படி, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அன்று இருந்த 122 கோடி மக்களில், 67  விழுக்காடு மக்களுக்கு (81  கோடி) தானியங்கள் வழங்குவது  சட்டப்பூர்வமாக உறுதி செய் யப்பட்டது. இந்த வறுமை ஒழிப்புத் திட்டத்தை 2014-ல் ஆட்சிக்கு வந்த  பாஜக செயல்படுத்து வதில் அக்கறை காட்டவில்லை. இந்தத் திட்டத்தின்படி, தானி யங்களுக்குப் பதிலாக நேரடி பயன் மாற்றத்தின் மூலம் பண மாக வழங்குவதற்கு முயற்சி  செய்தது. ஆனால், இதற்கு  எதிர்ப்பு எழுந்த காரணத்தால், ஆதார் அட்டையை அடிப்படை யாக வைத்து 2017 முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடுமையாக மக்கள் பாதிக் கப்பட்டிருக்கிற சமயத்தில், பொது விநியோகத்துறை மூலம் உணவு தானியங்கள் விரை வாக வழங்க வேண்டும்.  ஆனால்,  தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி, மொத்த பயனாளி களான 80.3 கோடி மக்களில், 60.3 கோடி மக்களுக்குத்தான் இல வசமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா வால் ஏப்ரல், மே, ஜூன் மாதங்க ளில் இலவசமாக உணவு தானி யங்கள் வழங்கப்பட்டு வரு கின்றன. ஆனால், நாடு முழுவ தும் விநியோகிப்பதற்காக வழங்கப்பட்ட 12 மில்லியன் டன்  உணவு தானியங்களில், 6.8 மில்லியன் டன் தான் விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது.

பொது விநியோகத்துறை மூலம், உணவு தானியங்கள் காலதாமதத்தோடு வழங்கப் படுவதால், வறுமையில் சிக்கி யிருக்கிற ஏழை, எளிய மக்கள் கடு மையாகப் பாதிக்கப்பட்டு வரு கிறார்கள். உணவு தானியங்கள் அனைத்து மக்களுக்கும் விரை வாக சென்றடைவதற்கு மத்திய உணவு அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் உரிய நடவடிக் கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.\

2020ஆம் ஆண்டு மக்கள் தொகை 137 கோடி ஆக உயர்ந்தி ருக்கிறது. அதில் 67 விழுக்காடான  92 கோடி மக்களுக்கு, தேசிய  உணவுப் பாதுகாப்புச் சட்டத் தின்படி, உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இதில் விடு பட்ட ஏறத்தாழ 10 கோடி மக்க ளுக்கு உணவு தானி யங்கள் வழங்க, மத்திய அரசு மறுத்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் மட்டும் ஏறத்தாழ 3 லட்சம்  குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள் ளன. இவர்களுக்கு குடும்ப அட்டைகள் இல்லாததுதான் உணவு தானியங்கள் வழங்கப் படாமல் இருப்பதற்குக் காரணம் என்று மத்திய அரசு கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

கொடிய கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இல வசமாக உணவு தானியங்கள் வழங்கவேண்டும் என்பது தான் மத்திய அரசின் நோக்கமாக இருக்க வேண்டும். மக்கள் தொகை அதிகரிப்பைக் கணக்கில் கொண்டு, கையி ருப்பில் உள்ள தானியங்களை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அழகிரி கூறி யுள்ளார்.

 

;