ராஜஸ்தானில் இருந்து தமிழக பாஜக நிர்வாகி அபின் கடத்தி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக பெரம்பலூர் மாவட்ட துணை தலைவரும் ஓபிசி அணி மாநில செயற்குழு உறுப்பினராகவும் உள்ளவர் அடைக்கலராஜ். இவர் திருச்சியில் காரில் போதை பொருள் பதுக்கி வைத்திருப்பதாக போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து டிஎஸ்பி செந்தில் குமார், காமராஜ் தலைமையிலான போலீசார் வாகன பரிசோதனையில் ஈடுபட்டு அந்த காரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது 10 லட்சம் மதிப்பிலான 2 கிலோ அபினை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து கார் பெரம்பலூர் டாக்டர் ஒருவருக்கு சொந்தமானது. திருச்சி மீட்டிங்கிற்காக வந்த டாக்டரிடம் தனது காரை கொடுத்து விட்டு டாக்டரின் காரில் சுற்றியதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து இரண்டு காரையும் காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடைக்கல ராஜ் உள்ளிட்ட ஐந்து பேர் அபின் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்தசஷ்டி கவசம் தொடர்பான சர்ச்சையில் முருகனை முன்னிறுத்தி அரசியல் ரீதியான பிரச்சாரத்தை பாஜக முன்னிறுத்தியது. இந்நிலையில் தற்போது பாஜக நிர்வாகி அபின் கடத்தலையடுத்து அபினுக்கு அரோகரா என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.