சென்னை, ஜூலை 19- உள்ளாட்சி அமைப்புகளுக் கான தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பதற்கான சட்ட மசோதா சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 2016-ஆம் ஆண்டு உள் ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில் இதுவரை தேர்தல் நடைபெற வில்லை. எனவே, அந்த அமைப்பு களை நிர்வகிக்கும் தனி அலுவ லர்களின் பதவிக்காலம் 6 மாதங் களுக்கு ஒரு முறை நீட்டிக்கப் பட்டு வருகிறது. அந்த வகை யில், அவர்களின் பதவிக்கா லத்தை வரும் டிசம்பர் 31 வரை நீட்டிக்கும் மசோதாவை வெள்ளி யன்று(ஜூலை 19) சட்டப் பேர வையில் அமைச்சர் எஸ்.பி.வேலு மணி தாக்கல் செய்தார். அதில் உள்ளாட்சித் தேர்தல் ரத்துக்கான காரணம் மற்றும் வழக்குகளின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், தேர்தல் நடத்துவதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் 31 வரையோ, தேர்தல்களுக்குப் பிறகு மன்றத்தின் முதல் கூட்டம் வரையோ, எது முதலில் வரு கிறதோ அதுவரை தனி அலுவ லர்களின் பதவிக்காலம் நடை முறையில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆவடி மாநகராட்சி
ஆவடி மாநகராட்சி குறித்த சட்ட மசோதவை தாக்கல் செய்த அமைச்சர்“ஆவடி சிறப்புநிலை நகராட்சியில் மக்கள் தொகை அதிகரிப்பு, ஆண்டு வருமானத் தின் வளர்ச்சி மற்றும் மக்களை பெருக்கத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதன் பொருட்டு வகை செய்யப்பட வேண்டிய நகரப் பணிகளின் அளவு ஆகியவற்றைக் கருத் தில்கொண்டும், இந்த நகராட்சி யின் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் இந்த நகராட்சியை மாநகராட்சி யாக தரம் உயர்த்த முடிவு செய் தது. அறிப்பை கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி வெளியிட்டது. இதற்காக ஆளுநர் அவரச் சட் டத்தை பிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து ஜூன் 17 ஆம் தேதி அரசிதழின் சிறப்பிதழில் வெளி யிப்பட்டது” என்றார்.
இந்த மாநகராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 72 மேற்படாமல் இருக்க வேண் டும். பட்டியல் சாதிகளையும் (எஸ்சி), பட்டியல் பழங்குடிகளை யும்(எஸ்டி) சேர்ந்த நபர்க ளுக்கு பதவியிடங்கள் ஒதுக்கப் பட வேண்டும். அந்த எண் ணிக்கை என்பது இந்த மாநக ரத்தின் மொத்த மக்கள் தொகைக்கு எந்த வீதத்தில் அமைந்திருக்கிறதோ அதே வீதத்தல் நேரடித் தேர்தலின் மூலம் நிரப்பப்பட வேண்டும். எஸ்சி,எஸ்டி வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு 50 விழுக்காட்டிற்கும் குறையாமல் இருக்க வேண்டும். அதேபோல் பெண்களுக்கான பதவியிடங்கள் தனியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். அந்த எண்ணிக்கை மொத்த உறுப்பினர் எண்ணிக்கை யில் எஸ்சி,எஸ்டி பெண்களுக் கான ஒதுக்கீடு செய்யப்படும் பதவியிடங்களின் எண்ணிக்கை உள்ளடங்கலாக 50 விழுக்காட் டிற்கு குறைவாக இருக்கக் கூடாது என்றும் மாநகராட்சியாக அறிவித்தபோது சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறவில்லை. எனவே, மேற் சொன்ன முடிவு களுக்கு செயல்வடிவம் கொடுப்ப தற்கும் அவரச் சட்டத்திற்கு பதி லாகவும் இந்த மசோதா அமைய விழைகிறது என்றும் அமைச்சர் கூறினார்.