tamilnadu

img

அண்ணா பல்கலை.க்கு சீர்மிகு அந்தஸ்து: மாணவர்கள் கோரிக்கை

சென்னை, மே 11- அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு அந்தஸ்தைப் பெறுவதற்கான ஒப்புதல் கடிதத்தை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டுமென முன்னாள் மாணவர்கள் முதலமைச்சருக்குக் கடிதம் எழுதி யுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத் தின் முன்னாள் மாண வர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முதல மைச்சருக்கு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அதில், “கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் மிகவும் பழமை வாய்ந்தது. மத்திய அரசு சீர்மிகு பல்கலைக் கழக  அந்தஸ்தை வழங்க உள்ளது. இதனால் அண்ணா  பல்கலைக்கழகத் திற்கும், தமிழ்நாடு மக்களுக்கும் பல்வேறு நன்மைகள் ஏற்படும். அண்ணா பல்கலைக்கழகத் தில் கிண்டி பொறி யியல் கல்லூரி, அழகப்பா தொழில் நுட்பக் கல்லூரி, கட்டடக் கலைக் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனம் ஆகிய நான்கு நிறுவனங் கள் பல்வேறு சிறப்புகளைப் பெற்றுள்ளது. சிறந்த பேராசிரியர்களும் இங்கு உள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத் திற்கு சீர்மிகு அந்தஸ்து கிடைத்தால் மத்திய அரசு ஐந்து ஆயிரம்  கோடி ரூபாய் நிதியை அளிப்பதுடன், உலக அளவில் 500 பல்கலைக் கழகத்திற்குள் தர வரிசைப் பட்டியலில் இடம் பெற முடியும். மேலும், அண்ணா பல்கலைக் கழகத்தினால் வளாகங்களும் கல்வி, மாணவர் சேர்க்கைப் போன்ற வற்றில் சுதந்திர மாகச் செயல்பட முடியும். மேலும், கல்வியின் தரம் சர்வதேச தரத்தில் உயரும். தமிழ்நாட்டில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள  இட ஒதுக்கீட்டு முறையைத் தொடர்ந்து செயல்படுத்  தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு மத்திய அரசின் அனுமதி  பெறுவதற்கான கடிதம் அளிப்பதற்கு முதல மைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்”. இவ்வாறு கூறியுள்ளனர்.