பாஜகவைச் சேர்ந்த நாராயணன் திருப் பதி என்பவரை கொரோனா பாதிப்பு காரணமாக தொலைக்காட்சிகள் விவாதத்திற்கு அதிகம் அழைப்பது இல்லை போலிருக்கிறது. அவ் வாறு அழைக்கும்போது சம்பந்தா சம்பந்தமில்லாமல் கம்யூனிஸ்டு களை இழிவு செய்து கத்திக்கதறி தன்னுடைய வெறியை தீர்த்துக் கொள்வார். இப்போதைக்கு அதற்கு வாய்ப்பு இல்லாததால் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கம்யூனிஸ்டு கள் மீது அடிப்படை ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளிவீசி தன்னு டைய அரிப்பை தீர்த்துக்கொள்கிறார்.
‘கொரோனாவையும் அதை உருவாக்கிய கம்யூனிசத்தையும் ஒழிப்போம்’ என்று ஒரு பதிவு போட் டுள்ளார். இன்னொரு பதிவில் ‘இந்தியா வில் 27 பேர் உட்பட உலகம் முழு வதும் 31 ஆயிரத்து 737 பேர் கொரோனா தொற்றால் இறந்ததை கொண்டாடிக்கொண்டு இருக்கின்ற னர் கொடூர கம்யூனிஸ்டுகள்’ என்று ஒரு பதிவை போட்டுள்ளார். அது மட்டுமின்றி சீனாவிற்கு எதிராகவும் கியூபாவிற்கு எதிராகவும் கேரளா விற்கு எதிராகவும் தொடர்ந்து விஷ மத்தனமான பதிவுகளை போட்டு வருகிறார்.
உலகின் மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்ட சீனா கொரோனாவை சமாளித்தது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கேட்டறிந்ததோடு சீனாவின் உதவியை கேட்டுள்ளார்.துவக் கத்தில் கொரோனா வைரசை சீன வைரஸ் என்று கூறிவந்த டிரம்ப் கூட தன்னுடைய நிலையை மாற்றிக்கொண்டுள்ளார். ஆனால் நாராயணனும் பாஜகவும் சொன்ன தையே திரும்பத்திரும்ப சொல்லி சொறிந்துகொள்கிறார்கள்.
அமெரிக்கா உள்ளிட்ட வல்ல ரசு நாடுகளின் கொடூரமான பொரு ளாதார தடையை சந்தித்து வந்த கியூபா, இத்தாலி,ஸ்பெயின் உட்பட பல நாடுகளுக்கு தன்னுடைய மருத் துவர்களையும் மருந்துகளையும் அனுப்பி மனிதகுலத்திற்கு மகத் தான தோழனாக உயர்ந்துநிற்கிறது.
கொரோனாவால் கடும் பாதிப் புக்கு உள்ளான கேரளத்தில் உள்ள இடது ஜனநாயக முன்னணி அரசு, மக்களை பாதுகாப்பதில் நோய்த் தொற்றை தடுப்பதில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது.
முதலாளித்துவம் கையை பிசைந்து செய்வதறியாது திகைத்து நிற்கும் நிலையில் சோசலிச நாடு களும் சோசலிச சிந்தனையும் நிலை மையை சமாளிப்பதில் முன்னுதார ணமாக விளங்குகின்றன.இதை தீக்கதிரிலும் சமூக வலைத்தளங்க ளிலும் தோழர்கள் பகிர்ந்து வரு வதை பொறுத்துக்கொள்ள முடியா மல்தான் நாராயணன் நவீன துர்வாச ராக மாறி சாபம்விட்டுக்கொண்டி ருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்த பிற கும் அயோத்தியில் கோவில் கட்டப் போவதாக கூறிக்கொண்டு இவரது கட்சியை சேர்ந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் கூட்டம் கூட்டினாரே இது நியாயமா?
நாடே கடும் சிக்கலிலும் சிரமத்தி லும் மாட்டித்தவிக்கும் நிலையில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து குதிரை பேரம் மூலம் ஆட்சியை பிடித்தார்களே.இதுதான் கொரோ னாவை ஒழிக்கும் லட்சணமா?
நாராயணன் தன்னுடைய பதிவு களில் தொடர்ந்து இஸ்லாமிய மக்க ளுக்கு எதிராக விஷம் கக்குகிறார். ஆதாரமற்ற செய்திகளை பரப்பு கிறார்.கொரோனாவைக்கூட கட்டுப்படுத்திவிடலாம். ஆனால் இவர்களது அவதூறையும் அரு வருப்பு அரசியலையும் ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது போலிருக்கி றது.
நாராயணன் போன்றவர்கள் என்னதான் நடுத்தெருவில் புரண்டு உருண்டாலும் இன்றைய சூழலில் கம்யூனிசத் தத்துவம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது மறுக்க முடியாத உண்மை. நாராயணன் போன்றவர்களால் ஒருபோதும் கம்யூனிசத்தை ஒழிக்க முடியாது.இவர்களது குரு நாதர் ஹிட்லர்,முசோலினி போன்ற வர்களையே சந்தித்து முறியடித்த தத்துவம் இது.