ஒவ்வொரு வருடமும் ஜூன் 21 ஆம் தேதி உலக இசை தினமாக கொண் டாடப்பட்டு வருகிறது. இந்தியா, சீனா, பிரிட்டன், ஆஸ்திரே லியா உள்ளிட்ட 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த இசை தினம் கொண்டாடப்படுகிறது. உலக இசை வரலாற்றில் தொன்மையானதும், மிக சிறந்த பாரம்பரியத்தையும் கொண்டது தமிழர் இசை. அதிக இசைக் கருவிகளையும், இசை வடிவங்களையும் கொண்டது. பிறப்பு முதல் இறப்பு வரை மனித வாழ்வின் ஒரு அங்கமாக நிறைந் தது. பண்டைய காலத்தில் கோவில் முதல் அரசவை வரை சிறப்பிடம் பெற்றது நம் இசை. தோல் கருவி, துளைக்கருவி, நரம்பு கருவி, கஞ்சக் கருவி என நான்கு வகையாக இசைக் கருவிகளை பிரித்துள்ளனர் நம் முன் னோர்கள்.
தோல் கருவிகள்:
தோலினால் செய்யப்பட்ட பறை முரசு, நகரா, தமுக்கு, குடமுழா, கஞ்சிரா, மகுடம், தவில், மிருதங்கம், பம்பை, உடுக்கை, உறுமி, துடி ஆகியவை தோல் கருவிகளாகும். இதில் ஐந்து முகம் கொண்ட இசைக்கருவிகளும் அடங் கும்.
துளைக்கருவிகள்:
இவ்வகை இசை கருவிகள் மரம் மற்றும் உலோகத்தை குடைந்து உரு வாக்கப்படும். கொம்பு, எக்காளம், தாரை, திருச்சின்னம், நமரி, நாதஸ்வரம், மகுடி போன்றவை அடங்கும்.
நரம்பு கருவிகள்:
வீணை, கெத்து, கோட்டு, தம்புரா, வில்லடி ஆகியவை நரம்பினால் செய்யப்படுபவை.
கஞ்சக்கருவிகள்:
அடித்தாலும் அசைத்தாலும் ஒலி தருபவை இக்கருவிகள். ஜால்ரா, சலங்கை வகைகள், சேகண்டி, சிலம்பி, பாசிமணி ஆகியவை இதில் அடங்கும். தமிழக இசை 1700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 350-க்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் இருந்துள்ளன. ஆனால் தற்போது 30-க்கும் குறைவான இசைக்கருவிகளே பயன்பாட்டில் உள்ளன. இசையிலும் மேல்தட்டு, கீழ் தட்டு என்ற பாகுபாடு நிலவியதே இதன் அழிவிற்கு காரணம். சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருந்த பெரும் பாலான இசைக்கருவிகளும் அதன் இசை வடிவங்களும் அழிந்து விட் டன. குறிப்பாக பழங்குடியின மக்க ளின் பழமையான பாரம்பரிய இசைக் கருவிகள் அழிவின் விளிம்பில் உள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் வட்டத்திற்கு உட்பட்ட தொன்மையான பழங்குடியின மலைக்கிராமங்களில் பாரம்பரிய இசைக்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. இயற்கை யோடு இணைந்து வாழும் இப்பழங் குடியின மக்களுக்கு துக்கமோ, மகிழ்ச் சியோ இசையே பிரதானம். கிராமத் தினுள் குழந்தை பிறந்தாலும், முதிய வர் மறைந்தாலும் ஊர் கூடி தங் களது பாரம்பரிய இசையினை இசைப் பது வழக்கம். தமிழக கேரள எல்லை யில் அடர்ந்த வனத்தின் நடுவே உள்ள தூமனூர், கண்டிவாழி, பனப்பள்ளி, ஜம்புகண்டி, கல்காடு, காளப்பதி, சேக்கண்டி உள்ளிட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்க ளில் பழமையான அவர்களது இசை யினையும் ராகங்களையும் கேட்பது அரிதாகி வருகிறது. பாரம்பரிய இசைக் கருவிகள் மெல்ல மெல்ல அழிந்து போனதும், அடுத்த தலைமுறைக்கு இவற்றை கொண்டு சேர்க்க இயலாத தும் பழங்குடியின இசையின் மறை விற்கு காரணமாமாகிறது.
பாரம்பரிய இசையினை காக்க தமிழக இசைத்துறை முன்வராததும், கைபேசி, தொலைகாட்சி போன்ற நகர்புற நவீன சாதனங்கள் மலைக் கிராமங்களை சென்றடைந்துள்ளதும், ஆதிவாசி இளைஞர்களிடையே பரவி வரும் மது பழக்கமும், ஆதிவாசி கிராமங் களின் இசையினை நலிவடைய வைத் துள்ளது என்கின்றனர் சமூக ஆர்வ லர்கள். குறிப்பாக, டாஸ்மாக் மதுவால் தங்களது பாரம்பரியம் அழிந்து வருவ தாக தெரிவித்து, கேரளாவில் பழங்குடி யினர் வசிக்கும் பகுதிகளில் மதுக்கடை களுக்கு தடை உள்ளது போல் தங்கள் பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பழங்குடியின பெண்கள் தங்களது இசைக்கருவிகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டும் பலனில்லை.
கிபி 1085-ஆம் ஆண்டு முதல் 1100 வரை கொங்கு மண்டலத்தை ஆண்ட அபிமான சோழ ராஜாதிராஜ னால் இசைக்கலைஞர்கள் ஊகுவிக்கப் பட்டதும் தவறாமல் இவர்களுக்கு கொடை வழங்கப்பட்டு வந்ததும் கல் வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது. ஆனால் காலப்போக்கில் பாரம்பரிய கிராமப்புற இசைக்கலைஞர்கள் கண்டு கொள்ளாமல் விடப்பட்டதும் பழமை யான இசையின் அழிவிற்கு முக்கிய காரணமாகிறது. தமிழக இசை கல்லூரி களில் பண்டைய இசை மற்றும் இசைக் கருவிகள் குறித்து ஆய்வுகள் நடத்தப் படுவதுமில்லை இவை வளர ஊக்கப் படுத்தப்படுவதுமில்லை. 150 ஆண்டு கள் பாரம்பரியம் கொண்ட சாக்க்ஷா போன் எனும் இசைக்கருவியை ஆங்கி லேயர்கள் ஆவணப்படுதியுள்ளனர். ஆனால் 1700 ஆண்டுகள் பழமையான இசைக்கருவிகளும் குறிப்புகளும் இது வரை ஆவணப்படுத்தப்படாமல் உள்ளன. எனவே தமிழக அரசு அழி வின் விளிம்பில் உள்ள பழமையான பழங்குடியின இசையை காக்க முன்வர வேண்டும் என்பதே இசை ஆர்வலர்க ளின் கோரிக்கையாக உள்ளது.
இரா.சரவணபாபு, மேட்டுப்பாளையம்.